states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காற்றின் தரக் குறியீடு 700யை நெருங்கி யுள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநி லத்தின் முக்கிய நகரான நொய்டா, நாட்டின் மிக வும் காற்று மாசுபாடான நகரமாக மாறியுள்ளது. நாட்டின் தலைநகர் மண்டலமான தில்லியும் நொய்டாவைப் போல காற்றின் தரக் குறியீடை இழந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்க பிஸ்கட்டுகளை இந்தியா - வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை யினர் பறிமுதல் செய்தனர்.

மதுபான கலால் ஊழல் வழக்குத் தொடர்பாக தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வியா ழனன்று (நவ. 2) விசாரணைக்கு ஆஜராக  அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவல கத்தில் ஆஜராகவில்லை. 5 மாநில தேர்தல் பிரச்சா ரத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆஜராக முடியவில்லை என்றும், விசாரணைக்கு ஆஜராக வேறு தேதி ஒதுக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறைக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.

தற்போது போக்சோ சட்டம் இளம் பருவத்தி னரை சுரண்டும் கருவியாக மாறியுள்ளது. போக்சோ வழக்குகளில் ஜாமீன் வழங்கும் போது  காதலால் ஏற்படும் சம்மத உறவை கருத்தில் கொள்ள வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே சாலை யில் நோயாளியுடன் சென்று கொண்டிருந்த  ஆம்புலன்ஸ் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் நோயாளி உயிரிழந்தார். நோயாளியை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனமே வெடித்துச் சிதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள அனைத்து மராத்தியர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும் என அரசாங்கக் குழுவுடனான பேச்சுவார்த்தையின் போது, மராத்தா இடஒதுக்கீடு கோரி உண்ணாவிரதம் இருக்கும் ஆர்வலர் மனோஜ் ஜராங்கே தெரிவித்தார்.

அரசுப் பல்கலைக்கழக வளாகங்களில் இல வச வைபை வசதி வழங்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.

மிசோரம் சட்டமன்ற தேர்தலில் பெரும் பான்மை கிடைக்காவிட்டாலும் பாஜகவுடன்  கூட்டணி அமைக்க மாட்டோம் என சோரம் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.