states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

புதுக்கோட்டை அருகே கோயில் திருவிழாவின் போது குளத்தில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் மங்களூரில் ஞாயிறன்று நள்ளிரவு சரக்கு ரயில் மோதி 17-க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் உயிரிழந்தன. ரயில் மோதி யதில், இந்த மாடுகள் அருகிலிருந்த பள்ளத்தாக்கில் தூக்கி வீசப்பட்டன. இதில் 3 எருமை மாடுகளின் உடல்களை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் மீட்டுள்ளனர்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின்பு, மணிப்பூர் மாநில முதல்வர் பைரன் சிங் செய்தியாளர்களிடம் கூறுகை யில், “வடகிழக்கு மாநிலங்கள் அதன் முன்னுரிமை யைப் பெறும். மணிப்பூரின் தற்போதைய நிலவரம் குறித்து உள்துறை அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தோம். மாநிலத்தில் இயல்புநிலை திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த வன்முறையால் 71 பேர் உயிரிழந்துள்ளனர்” என்றார்.

விரைவில் உதவி  சுற்றுலா அலுவலர் பணி தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும்

சென்னை, மே 15- உதவி சுற்றுலா அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். உதவி சுற்றுலா அலுவலர்(கிரேடு 2) பணியில் 23 காலியிடங்கள் நிரப் பப்படும் என தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத்தின்2023 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையில் அறிவிக்கப்பட்டுள் ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கு சுற்றுலா தொடர்பான பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப் புடன் சுற்றுலா மேலாண்மையில் பட்டயப் படிப்பும் அதோடு அரசு கணினி சான்றிதழ் தேர்வு அல்லது அதற்கு  இணையான தேர்வில் தேர்ச்சியும் அடிப்படை தகுதிகளாக நிர்ணயிக்கப் பட்டுள்ளன. கணினி அறிவியல் பட்ட தாரிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு ஜூலை  மாதம் போட்டித் தேர்வு நடத்தப் படும், தேர்வு முடிவுகள் செப்டம்பரில் வெளியிடப்பட்டு அக்டோபரில் கலந் தாய்வு நடைபெறும் என்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள் ளது. பணியாளர் தேர்வாணையத்தின் திருத்தப்பட்ட ஆண்டு தேர்வு கால அட்ட வணையின்படி, சுற்றுலா அலுவலர் பதவிக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் மே மாதம் ஆகியும் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. இதுகுறித்து தேர்வாணைய செய லாளர் பி. உமா மகேஸ்வரி கூறுகை யில், உதவி சுற்றுலா அலுவலர் தேர்வுக்கான கல்வித் தகுதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பாக சுற்றுலாத் துறை ஒப்புதல் அளித்ததும் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறி னார்.

சவுக்கு சங்கர் மீது செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு

சென்னை, மே 15- சவுக்கு சங்கருக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்து உள்ளார். அந்த வழக்கு மனுவில் கூறி யிருப்பதாவது:- நான் 25 ஆண்டு காலமாக அரசி யலில் உள்ளேன். கரூர் மற்றும் அரவக் குறிச்சி சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப் பட்டு உள்ளேன். தமிழ்நாடு அமைச்சரா கவும் பதவி வகித்து வருகிறேன். சவுக்கு சங்கர் என்பவர்  யூடியூப் சேனலில் எனக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். என்னைப் பற்றி மட்டு மல்ல உயர் அதிகாரிகளையும் தொட ர்ந்து அவதூறு செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் ஒரு யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபான பார்களை நான் நடத்தி வருவதாக வும், இதனால் கட்சி தொண்டர்கள் அதி ருப்தியில் உள்ளதாகவும் கூறி பொய் யான குற்றச்சாட்டை கூறியுள்ளார். எனக்கு எதிரான வழக்கில் முதல் குற்ற வாளி என சேர்க்கப்பட்ட பாஸ்கர் மர்ம மான முறையில் இறந்ததாகவும் பொய் யான தகவலை கூறியுள்ளார். இதுபோல பல்வேறு குற்றச் சாட்டுகள் எனக்கு எதிராக அவர் சுமத்தி வருகிறார். எனவே சவுக்கு சங்கருக்கு எதிராக கிரிமினல் அவதூறு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

பள்ளி திறக்கும் முதல் நாளில் பாடப்புத்தகம் வழங்க ஏற்பாடு

சென்னை, மே 15- அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர் களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாட ப்புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் இல வசமாக வழங்கப்படுகிறது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்களுக்கு பாடப் புத்தகங்கள் மட்டு மின்றி, பென்சில், ஜாமின்ரி பாக்ஸ், கிரையான்ஸ், சீருடை, பள்ளி பை, ஷு உள்ளிட்ட பொருட்களும் இலவச மாக கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு பள்ளி திறக்கப்படும் முதல் நாளே மாணவர்கள் கையில் பாட புத்தகம் கிடைக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களுக்கும் பாட புத்தகங்கள் அனுப்பப்பட்டுவிட்டன. 2023-24 கல்வி ஆண்டில் மாண வர்களுக்கு விலையில்லா பாட புத்த கம் 5 கோடியே 16 லட்சம் அச்சி டப்பட்டுள்ளது. அதனை அனைத்து கல்வி மாவட்டத்துக்கும் அனுப்பும் பணி முழுமை அடைந்தன. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கட்டுப் பாட்டில் அவை குடோன்களில் இருந்து அரசு பள்ளிகளுக்கு அனுப்ப ப்படுகிறது. தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது. ஒரு சில நாட்களுக்குள் இந்த பணி நிறை வடைந்துவிடும். பள்ளி ஜூன் முதல் வாரத்தில் திறக்கும்போது அன்றைய தினமே பாட புத்தகங்கள் வழங்க கல்வித் துறை அனைத்து ஏற்பாடு களையும் செய்துள்ளது.