சென்னை, ஏப்.27- டாஸ்மாக் மதுபான சில்லரைவிற் பனை கடைகளில் 19 ஆண்டு காலமாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஊழியர் களின் நீண்டகால கோரிக்கைகள் பணி நிரந்தரம், அரசு ஊழியருக்கு இணையான காலமுறை ஊதியம் என்பதாகும். புதிய அரசு இக் கோரிக்கைகளை நடப்பு சட்ட மன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றி அறி விக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த ஊழி யர்களுக்கு ரூ.500 தொகுப்பூதியத்தில் உயர்த்தி வழங்கப்படும் என்று அரசு அறி வித்திருப்பது ஏமாற்றத்தை மட்டுமல்ல அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊதிய உயர்வு அறிவிப்புக்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
முந்தைய திமுக ஆட்சி காலத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500, ரூ.400, ரூ.300 ஊதிய உயர்வு பார்முலா உரு வாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக் காலத்தி லும் இந்த பார்முலா பின்பற்றப்பட்டு 14 முறை ஊதியம் உயர்த்தி அறிவிக் கப்பட்டது. தற்போதைய ஊதிய உயர்வை யும் சேர்த்தால் மேற்பார்வையாளருக்கு ரூ.13,750, விற்பனையாளருக்கு ரூ.11,600, உதவி விற்பனையாளருக்கு ரூ.10,500 என்ற அளவில் தான் ஊதியம் கிடைக்கும். இந்த ஊதியமானது குறைந்தபட்ச ஊதிய சட்டப்படியான ஊதியத்திற்கும் குறை வான ஊதியமாகும் என்பது ஆட்சியா ளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரி யாததல்ல. இந்த அறிவிப்பின் மூலம் டாஸ்மாக் ஊழியர்களின் நலனில் அக்கறையற்ற அரசு என்பதை அரசு சொல்லாமல் சொல்லியுள்ளதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆளுங்கட்சியின் தொழிற்சங்கமான தொ.மு.ச. பேரவை உள்ளிட்ட தொழிற் சங்கங்களின் நியாயமான, சட்டப்படி யான கோரிக்கைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாதது 26 ஆயிரம் குடும்பங்களின் நலன் உதாசீனப் படுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை முதலமைச்சர் கருத்தில் கொண்டு இந்த ஊதிய உயர்வை திரும்பப் பெற்று, காலமுறை ஊதியம் வழங்க உரிய அறிவிப்பினை வெளியிட வேண்டுமென டாஸ்மாக் ஊழி யர் மாநில சம்மேளனத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.