தஞ்சாவூர், டிச.29 - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் பல்வேறு சர்ச்சைகளும், மோதல்களும் அவ்வப் போது எழுந்து வருகிறது. கடந்த 2017-2018 ஆம் ஆண்டுகளில் பேரா சிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 40 பேரை, உரிய கல்வித் தகுதி இல்லாமல் முறை கேடாக, அப்போதைய துணைவேந்தர் பாஸ்க ரன், பணி நியமனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான பொதுநல வழக்கு தொட ரப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு துணைவேந்தராக திருவள்ளுவன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர், முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாக சொல்லப்படும் 40 பேரையும் தகுதி காண் பருவம் அடிப்படையில் நிரந்தர பணியில் அமர்த்த சிண்டிகேட்டில் ஒப்புதல் பெற்றதாக கூறப்பட்டது. இதுகுறித்து ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், திருவள்ளுவன் முறையான பதிலை அளிக்கவில்லை என்பதால், கடந்த அக்டோபர் 20 அன்று, அவரை இடைநீக்கம் செய்தும், ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தவும் ஆளுநர் தரப்பில் உத்தரவிடப்பட்டது. பொறுப்பு துணைவேந்தரால் அசாதாரணச் சூழல் இதையடுத்து, தமிழக ஆளுநரால் தொழில்- நில அறிவியல் துறை பேராசிரியர் சங்கர் துணை வேந்தர் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இவர் பேராசிரியர், பணியாளர்கள் மற்றும் மாண வர்களிடம் அசாதாரண சூழல் ஏற்படும் நிலையை உருவாக்கி வருவதால், பல்கலைக் கழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொறுப்பு துணைவேந்தர் சங்கருக்கு பதிலாக, பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் பாரதஜோதியை துணை வேந்தர் பணிகளை கவனிக்கவும், ஆட்சிக்குழு வில் துணைவேந்தர் (பொ) குழு நியமிக்கப்படும் வரை செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறி, பொறுப்பு பதிவாளரான தியாகராஜன் ஆணை ஒன்றை வெளியிட்டார்.
இதற்கிடையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச் சந்திரன் தலைமையில் விசாரணை ஆணை யம் அமைக்கப்பட்டு இருப்பதால், தற்போது பொறுப்பு பதிவாளராக பணியாற்றும் தியா கராஜன், விசாரணை வரம்பிற்குட்பட்டு இருப்பதாலும், நிர்வாகக் காரணங்களுக்கா கவும் பதிவாளர் தியாகராஜனை பொறுப்பில் இருந்து நீக்கவும், அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் வெற்றிச்செல்வனை, மறுஆணை பிறப்பிக்கும் வரை அல்லது நிரந்தரப் பதிவாளர் பணி நியமனம் செய்யும் வரை பணியாற்ற ஆணையிடுவதாக, பொறுப்பு துணைவேந்தரான சங்கர் ஒரு ஆணையை வெளியிட்டார். இப்படியாக பொறுப்பு துணைவேந்தராக உள்ள சங்கரும், பதிவாளராக உள்ள தியாக ராஜனும் மாற்றி, மாற்றி ஆணை பிறப்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆணைகளை நிறுத்தி வைக்க உத்தரவு இதுகுறித்து பல்கலைக்கழக பணியாளர்கள் கூறுகையில், “கடந்த டிசம்பர் 24 அன்று, தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. அப்போது, ஆட்சிக்குழுக் கூட்டம் நடத்துவ தற்கான கோப்பினை நகர்த்துமாறு, தமிழ் வளர்ச்சித் துறையின் செயலாளர், பல்கலைக் கழக பதிவாளரான தியாகராஜனிடம் அறிவுறுத்தி யுள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், துணைவேந்தர் பொறுப்பில் உள்ள சங்கர் அரசு செயலாளருடன் ஆலோசனை பெறாமல், பதிவாளர் பொறுப்பில் உள்ள தியாக ராஜனை நீக்கினார். இச்சம்பவம் தமிழ் வளர்ச்சித் துறையின் செயலாளர் கவனத்திற்கு சென்ற நிலையில், பல்கலைக்கழகத்தில், பழைய நிலையே தொடர வேண்டும். இரண்டு ஆணைகளையும் நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்” என தெரி வித்தனர்.