தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து இதுவரை 40க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.இதனால் கடந்தாண்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதற்கு ஆளுநர் ஆ.என்.ரவி ஒப்புதல் அளித்தார். பிறகு அக்டோபர் 19, 2022 இல் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதன்பின்னர் மசோதாவில் சில விளக்கங்கள் கேட்ட ஆளுநருக்கு 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.அதன்பின் 4 மாதங்கள் கழித்து மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பியனுப்பினார். சட்ட மசோதாவை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை என காரணம் கூறினார் .
மீண்டும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி மீண்டும் ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதா சட்டப்பேரவையில் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்த நிலையில் நேற்று ஏபுஅல் 10 அன்று ஆளுநருக்கு எதிரான தீர்மானம் தமிழக அரசால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரத்தில் ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தைடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் ஆன்லைன் தடை சட்ட மசோதா இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாதம் சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என தமிழக அரசின் அரசிதழில் கூறப்பட்டுள்ளது