தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் கோவை சூலூர் சிஎஸ்ஆர் திருமண மண்டபத்தில் வெள்ளியன்று துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் பெ.சண்முகம் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் ஹன்னன்முல்லா, மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், பொருளாளர் பி.பெருமாள் மற்றும் டி.ரவீந்திரன், டில்லிபாபு, எஸ்.ஆர்.மதுசூதனன், வி.ஆர்.பழனிச்சாமி, வி.பி.இளங்கோ உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.