திருநெல்வேலி, ஜூலை 2- பாளையங்கோட்டை மத்திய சிறை யில் இறந்த தங்கசாமி வழக்கில் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செய லாளர் கே.சாமுவேல்ராஜ் வலியுறுத்தி னார். திருநெல்வேலியில் ஜூலை 1 சனிக் கிழமையன்று தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய அளவில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 4 சத வீத வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. மீதமுள்ள வழக்குகள் அனைத்தும் உரிய குற்றப்பத்திரிகை கூட பதிவு செய்யப்படாத நிலையில் விசா ரணை தொடங்கப்படாத நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் எஸ்சி, எஸ்டி வன் கொடுமை வழக்குகள் 2016 முதல் 2021 வரை மொத்தம் 6400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நெல்லையில் 2016 முதல் 2021 வரை 5 ஆண்டுகளில் 736 வன்கொடுமை வழக்குகள் பதிவாகி யுள்ளன. இதில் கொலை வழக்குகள் 22, கொலை முயற்சி 63 உள்பட சிறைத் துறை, காவல்துறை சித்ரவதை தொடர் பான பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் நெல்லை வண்ணார்பேட்டை கல்பனா வழக்கு மற் றும் உடுமலை சங்கர் ஆகியோரின் வழக்குகள் மட்டுமே விரைந்து முடிக் கப்பட்டுள்ளன.
அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றம் அமைத்திடுக!
பாளையங்கோட்டை மத்திய சிறை யில் இறந்த தென்காசி மாவட்டம் புளி யங்குடியை சேர்ந்த தங்கசாமி வழக்கில் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குடும்பத்தி னருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வரவேண்டிய ரூ.13 லட்சத்தை வழங் குவதோடு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.சி., எஸ் டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளுக்கான மாநில விழிப்பு கண் காணிப்புக்குழு கூட்டம் கடந்த அதி முக ஆட்சியில் நடத்தப்படவே இல்லை. தற்போதைய திமுக ஆட்சியில் 3 முறை இந்த கண்காணிப்புக்குழு கூட்டம் நடத் தப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களில் தமிழ்நாட்டில் எஸ்சி., எஸ்டி வன் கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அதில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அதன் விசாரணை எந்த நிலையில் உள் ளது; அதை துரிதப்படுத்துவது குறித்து ஆய்வுகள் செய்து, அரசு உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தக் கூட்டத்தில் இதுபோன்ற தகவல்களை டிஜிபி அறிக்கையாக தாக்கல் செய்வ தோடு அது குறித்த முடிவுகளை சட்ட மன்றத்தில் விவாதிக்க வேண்டும்.
வன் கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதி மன்றம் அமைக்க வேண்டும். தமிழகத் தில் 9 சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. எனவே அனைத்து மாவட்டங்களிலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளை விசாரிப்ப தற்கான இது போன்ற சிறப்பு நீதிமன்றங் களை உருவாக்கி நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும். அனைத்து மாவட் டங்களிலும் உள்ள வழக்குகளில் தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவியல் வளர வளர சாதி பின்னோக்கிச் செல்ல வேண்டும். ஆனால் தற்போதும் தமிழ்நாட்டில் வன் கொடுமைகள் அதிகரித்து வருகின் றன. வழிபாட்டுத் தலங்களிலும் தீண் டாமை அதிகரித்து வருகிறது. அதை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியாவில் தமிழ் நாட்டில் தான் அதிக அளவில் மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியா வில் நிகழ்ந்துள்ள மொத்த மரணங்களில் 20 சதவீதம் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது. இதற்கு நகர்மயத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் சரியான அளவில் இல்லை என்பதே காரணம். கழிவு மேலாண்மை குறித்த கல்வி அவசியம், எனவே தமிழ்நாடு அரசு அண்ணா பல்க லைக்கழகத்தில் துப்புரவு பொறியியல் துறையை துவங்க வேண்டும். இதன் மூலம் கழிவு மேலாண்மையில் தேவைப் படும் புதிய கருவிகள், ஆக்கப்பூர்வ மான நடவடிக்கைகளை எடுக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களுக்கு விருப்பமான வழக்கறிஞரை நியமிக்க வும் அவருக்கான வழக்கு செலவுகளை அரசே கொடுக்க வேண்டும்.
நெல்லையில் வழங்கப்படாத ரூ.1.50 கோடி தீருதவித்தொகை
எஸ்சி எஸ்டி வழக்குகளுக்காக ஒதுக்கப்படும் தீருதவித்தொகை நெல் லையில் மட்டுமே ஒன்றரை கோடி ரூபாய் வரை பாக்கியுள்ளது. இத்தொகையினை உரிய முறையில் கிடைக்கச் செய்வதின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிதி உதவி கிடைக்கும். நெல்லை நீதி மன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக எஸ்சி., எஸ்டி வன்கொடுமை வழக்கு களை விசாரிப்பதற்கான நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி நியமனமே நடைபெற வில்லை. சமீபத்தில் தான் நீதிபதி நிய மிக்கப்பட்டுள்ளார். எனவே தற்போது நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி நெல்லை மாவட்டத்தில் நடந்தேறியுள்ள வன் கொடுமை தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,சாதிகள் இல்லையடி பாப்பா, இது போன்ற சமூக நீதி குறித்த கருத்துக்களை மக்கள் மத்தியில் அரசு பரப்ப வேண்டும். அதோடு பள்ளி பாடப் புத்தகத்திலும் சமூக நீதி கருத்துக்கள் இடம் பெற வேண்டும். இதன் மூலம் மக்கள் மத்தியில் உளவியல் மாற்றம் ஏற்படக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் எம்.சுடலைராஜ்,மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் பழனி,மாநிலக் குழு உறுப்பி னர் பூ.கோபாலன். தமிழர் உரிமை மீட்பு களம் ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி, திராவிடர் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் திருக்குமரன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, பூர்வீகத் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பாலமுருகன் ஆகி யோர் உடனிருந்தனர்.