புதுதில்லி, நவ. 10 - “சட்டமன்றத்தால் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது” என்றும், “தமிழக அரசு அனுப்பிய கோப்புகளின் மீது ஆளுநர் முடிவெடுக்காதது ஏன்?” என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக நவம்பர் 20-க்குள் பதிலளிக்குமாறு ஆளுநரின் செய லாளருக்கு நோட்டீஸ் அனுப்பி யிருக்கும் உச்ச நீதிமன்றம், அன்றைய தினம் ஒன்றிய அரசின் அட்டர்னி ஜென ரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரல் ஆகி யோரும் ஆஜராகுமாறு உத்தர விட்டுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைப்பதற்கு எதி ராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் 2 ரிட் மனுக்களை தாக்கல் செய்தி ருந்தது. இந்த இரண்டு ரிட் மனுக்களும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்தி வாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளி யன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்கி, பி. வில்சன் ஆஜராகினர். அவர்கள், “2020-ஆம் ஆண்டு முதல் 2023-க்கு இடையே தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட 12 மசோதாக்கள், 2020 ஜனவரி முதல் 2023 ஏப்ரல் 28 வரை யிலான ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் 2 ஆண்டு களுக்கும் மேலாக அவை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
குற்றவியல் நட வடிக்கைகளுக்குக் கூட ஆளுநரின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டி யுள்ளது. 54 சிறைவாசிகளை முன் கூட்டியே விடுதலை செய்யும் கோப்பு களையும் அவர் நிறுத்தி வைத்துள் ளார். கூடிய விரைவில் (As Soon As Possible) என்ற வாக்கியத்தை தமிழ்நாடு ஆளுநர் தவறாக புரிந்து கொண்டு தவறாக செயல்படுகிறார்” என்று தங்களின் வாதங்களை வைத்த னர். இதையடுத்து, “நீங்கள் (தமிழ்நாடு அரசு) இங்கே குறிப்பிடும் விஷ யங்கள், தீவிரமான மற்றும் கவ லைக்குரிய பிரச்சனைகளாகவே இருக்கின்றன. குறிப்பாக டிஎன்பி எஸ்சி-யில் தலைவர் பதவி 10 பதவி யிடங்கள் காலியாக உள்ளது மிகவும் கவலை அளிக்கும் விஷயம். ஆளு நர் சட்டப்பேரவைகளில் நிறைவேற் றப்படும் மசோதாக்களை எதுவுமே செய்யாமல் காலவரையின்றி கிடப்பில் போட முடியாது” என்று தலைமை நீதி பதி டி.ஒய். சந்திரசூட் குறிப்பிட்டார். தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக, ஆளுநரின் செயலாளர், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்ச கம் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட தலை மை நீதிபதி அமர்வு, வழக்கை நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய நாளில் அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரல் ஆஜ ராகவும் உத்தரவிட்டுள்ளது.