சென்னை,ஜூலை 20- கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின் (NFCSF) கட்டுப்பாட்டில் உள்ள கரும்பு மேம்பாட்டு நிதியில்( SDF) இருந்து மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை 1994 இல் ரூ. 6.71 கோடியை கடனாக வாங்கி னர். நெருக்கடிகளின் காரண மாக எஸ்டிஎப்-இல் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடிய வில்லை. வட்டியுடன் பணத்தை கட்ட வேண்டும் என்று மதுராந்தகம் ஆலைக்கு நெருக்கடி தந்தனர்.இந்த நிலையில் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை எஸ்டிஎப்-இல் வாங்கிய கடன், அதற்கான வட்டியும் சேர்த்து 12 கோடியை மாநில அரசு 2017 இல் எஸ்டிஎப்-க்கு கட்டியது. இதன் பின் ஓடிஎஸ் (OTS) ஐ ஏற்க முடியாது 33 கோடி ரூபாய் அபராத வட்டியாக கட்ட வேண்டும் என தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (NFC SF) நோட்டீஸ் அனுப்பியது. அபராத வட்டியை கட்ட இய லாது தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டு மதுராந்தகம் கூட்டு றவு சர்க்கரை ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் துள்ளது. அபராத வட்டியை கட்ட வேண் டும் என்று தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கான கூட்டமைப்பு (NFCSF) இன்று வரை நிர்ப்பந்தித்து வருகிறது. இதே போல திருத்தணி கூட்டு றவு ஆலையும் அபராத வட்டியை முழுமையாக கட்ட வேண்டும் என கேட்டு வழக்கு உள்ளது.
மதுராந்தகம்,திருத்தணி, என்பிகேஆர் ஆகிய மூன்று சர்க்கரை ஆலைகள் எஸ்டிஎப் (SDF)-இல் வாங்கிய கடன், அதற் கான வட்டியை மாநில அரசு செலுத்தி விட்ட நிலையில் அபராத வட்டியை தள்ளுபடி செய்திட வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆரூரான் தனியார் சர்க்கரை ஆலைகள் வங்கிகளில் வாங் கிய கடன் ரூ.1350 கோடியை தள்ளுபடி செய்தனர் . அம்பிகா தனியார் சர்க்கரை ஆலைகள் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.1380 கோடியை தள்ளு படி செய்தனர். கரும்பு விவசாயி களால் உருவாக்கப்பட்ட கரும்பு மேம்பாட்டு நிதியில் (Sugarcane Development Fund ) இருந்து கூட்டுறவு சர்க்கரை ஆலை கள் வாங்கிய கடன் அசலை செலுத்திய பின்பும் அபராத வட்டியை கேட்டு நெருக்கடி கொடுக்கும் ஒன்றிய அமைச்சகத்தின் அனுகுமுறை யால் திருத்தணி 36000,மதுராந் தகம் 24000, என் பி கே ஆர் 23000 என ஆலைகளின் பங்கு தாரர்களாக உள்ள 83 ஆயிரம் கரும்பு விவசாய குடும்பங்கள் பாதிக்கின்றனர். இந்த கடன் சிக்கலில் இருந்து மீளுவதன் மூலம் ஆலைகளை மேம்படுத்திட புதிய கடனை, நிதியை பெற முடியும் . வெள்ளியன்று பொதுச்செய லாளர் டி.ரவீந்திரன், விவசாயி கள் சங்க செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் வாசுதேவன் மது ராந்தகம் ஆலை நிர்வாக இயக்கு நர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினர். முன்னதாக மாநில சர்க்கரை துறை ஆணை யரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.