சென்னை, மே 29- ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நாட்டில் மநுவாதம் ஆட்சி செய்வது கொடுமையானது என்றும் மநுவாதத்தை ஏற்றக்கொண்டவர்கள்தான் ஒன்றி யத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் ஹரியானாவிலும் ஆட்சி செய் கிறார்கள் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி குற்றம்சாட்டினார். சாதி ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி சென்னை சைதாப்பேட்டையில் சனிக்கிழமை (மே 28) தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் அவர் பேசியதாவது: அனைத்தையும் சாதிய கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்கள் கலப்பு திருமணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். நமது நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர், “பருவ வயதை எட்டிய ஆணோ பெண்ணோ அவர்கள் தாங்கள் விரும்பியவர்களைத் திருமணம் செய்துகொள்ளச் சட்டத்தில் இடம் உண்டு’’ என்று கூறினார்.
ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் கலப்பு திரு மணத்தை ஒருசிலர் ஏற்க மறுக்கிறார்கள். தற்போதைய ஆட்சியாளர்கள் அம்பேத்கர் சிறந்த தலைவர், அரசியல் சாசன சிற்பி என்றெல்லாம் அவரை புகழ்ந்து கொண்டே மறு புறம் அவர் இயற்றிய அரசி யல் சாசனத்தைக் காட்டிலும் மநு வாதத்திற்கு சேவகம் புரிபவர்களாக இருக்கிறார்கள். எனவேதான் கலப்பு திருமணத்தை எதிர்க்கிறார்கள். திருமணம் வயதை உயர்த்த சட்டம் இயற்றவேண்டும் என்று திரும்ப திரும்ப சொல்கிறார்கள்.இது போன்ற நடவடிக்கைகளால் பெண்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த ஒரு ஆண் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தால் பரவாயில்லை என்று கூறுபவர்கள், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பெண் ஒடுக்கப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரைத் திருமணம் செய்தால் ஐய்யோ ராமா என்று கூச்சல் போடுகிறார்கள். திருமண வயது தொடர்பான சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு 7வயதில் 9 வயதில் பெண்களைத் திருமணம் செய்த காலம் உண்டு. திருமணம் முடிந்தவுடன் பெண்களைப் படிக்க அனுப்பமாட்டார்கள், அவர்கள் வெளியே செல்ல அனு மதிக்கமாட்டார்கள். ஆண்களால் வீட்டிலேயே அடக்கி வைக்கப்பட்ட னர். வர்ணாசிரமம் என்ற பெய ரில் பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் இன்றும் தொடர்வது வேதனையளிக்கிறது
சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகப் பல ஆண்டுகளாக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் போராட வேண்டுமோ? ஹரியானாவில் ஜாட் சமூகத்தினரின் காப் பஞ்சாயத்து என்ற சாதி பஞ்சாயத்திற்கு எதிராக வும் மாதர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. ஒரு பெண்ணோ ஆணோ ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டாலே அவர்களைக் கொன்று விடுவார்கள். குடும்பத்தைக் கிராமத்தை விட்டு ஒதுக்கி விடு வார்கள். கலப்பு திருமண காதல் ஜோடிகள் காவல்நிலையம் சென்றாலும் நீதிமன்றம் சென்றாலும் அவர்களுக்குப் பாது காப்பு இல்லாத நிலைதான் அங்கு நிலவுகிறது. காதலுக்கு நேரமில்லை என்று படம் எடுத்த தமிழகத்தில் கலப்பு திருமண காதலர்கள் உயி ருக்கு உத்தரவாதம் இல்லை. குழந்தைகள் மீது பெற்றோர் அதிக அன்பு வைத்துள்ளார்கள். அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். ஆனால் அதே பெண் வேறு ஒரு சாதியை சேர்ந்த நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டால் அந்த பெண்ணை கொலை செய்யவும் அதே பெற்றோர் தயங்குவதில்லை. எனவேதான் ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றுமாறு மார்க்சிஸ்ட் கட்சி யும் தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பெரியார் பிறந்த இந்த மண்ணில், சமூக நீதி நிலை நாட்டப்பட்ட இந்த மண்ணில் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. இவ்வாறு சுபாஷினி அலி பேசினார்.
போராட்டம் ஓயாது
முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் பேசியதன் சுருக்கம் வருமாறு: சாதி ஆணவ படுகொலையைத் தடுக்க சிறப்புச் சட்டம் கோரி 10வருடமாகப் போராடி வருகிறோம். இதற்கான சட்ட முன்வடிவை 2015ம் ஆண்டு சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் அ.சவுந்தரராசன் கொண்டு வந்தார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியைச் சந்தித்து நேரடியாக வலியுறுத்தினோம். இருப்பினும் சட்டம் வரவில்லை. கவுசல்யா-சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் கவுசல்யா இறந்திருந்தால் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்க முடியாது. சூரக்கோட்டை முருகேசன் வழக்கில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, மனித உரிமை ஆணையம் அறிவுறுத்திய பிறகே அபிராமிக்கு அரசு வேலை கிடைத்தது. இதுபோன்ற ஆணவப்படுகொலை வழக்குகளில் அரசின் அரசிற்குப் பொறுப்பு இருக்க வேண்டாமா? ஒரு மாணவியின் ``ஹிஜாப்பை கழற்றச் சொன்னதற்காக, ஒட்டு மொத்த மாணவிகளும் ``ஹிஜாப் அணிந்து வந்த பாரம்பரியம் கொண்டது தமிழகம். இந்தியாவின் வரைபடத்தை ஒப்பிட்டுப் பேசிய அம்பேத்கர், வட இந்தியாவின் பரப்பளவைப் போன்று தென்னிந் தியா பகுத்தறிவில் விரிந்து கிடக்கிறது என்றார். அதற்கேற்ப அரசு செயல்பட வேண்டும். சாதியத்தையும், சாதிய உணர்வு களையும் தகர்ப்போம். ஆணவப் படுகொலைக்கு எதிராகச் சிறப்புச் சட்டம் இயற்றும் வரை ஓய மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்திற்கு முன்ன ணியின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.லெனின் தலைமை தாங்கினார். சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், முன்னணியின் பொரு ளாளர் இ.மோகனா, வாலிபர் சங்க மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், செயலாளர் எஸ்.பாலா, முன்னணியின் நிர்வாகி கள் வி.ஜானகிராமன் (வட சென்னை), கே.மணிகண்டன், பி.ஆர்.முரளி (தென்சென்னை), பி.சுந்தரம் (மத்திய சென்னை), கே.வாசுதேவன் (செங்கல்பட்டு), டி.கன்னியப்பன் (திருவள்ளூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.