states

நாட்டின் ஜனநாயகம், பன்முகத் தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது!

ஜெய்ப்பூர், மே 13 - காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ (சிந்தன் சிவிர்) என்ற பெயரிலான சிறப்பு மாநாடு, ராஜஸ்தானின் உதய்பூரில் துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நட வடிக்கைகள், இந்தாண்டு இறுதியில் நடை பெறவுள்ள குஜராத், இமாசல பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்கள், 2024 மக்கள வைத் தேர்தல் குறித்து விரிவான ஆலோச னைகள் நடத்தப்பட உள்ளதாக கூறப்படும் இந்த 3 நாள் மாநாட்டை, காங்கிரஸ் கட்சி யின் தலைவர் சோனியா காந்தி வெள்ளிக் கிழமையன்று துவக்கி வைத்து உரையாற்றி னார். அதில் அவர் பேசியிருப்பதாவது: “பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் அதன்  துணை அமைப்புகளால் நாடு எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள் குறித்து நமக்குள் விவாதிக்க இந்தக் கூட்டம் வாய்ப்பு அளித்துள்ளது. நமக்கு முன்னால் உள்ள பல பணிகளைப் பற்றி ஆலோசிக்க இது ஒரு சந்தர்ப்பமாகும்.  கட்சி நிர்வாகிகள் திறந்த மனதுடன் விவாதித்து கட்சியை வலுவான அமைப்பாக உருவாக்க வேண்டும்.

இந்த சிந்தனை அமர்வானது, நமக்கு முன்னால் உள்ள பல சவால்களைப் பற்றி ஆலோசிக்கவும், அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வரவும் ஒரு வாய்ப்பாகும். குறிப்பாக, தேசிய பிரச்சனைகள் மற்றும் கட்சி அமைப்பு பற்றிய அர்த்தமுள்ள சுய பரிசோதனை குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.  ‘அதிகபட்ச நிர்வாகம், குறைந்தபட்ச அரசு’ என்ற அவர்களின் (பாஜக) முழக்கத்தின் மூலம் பிரதமர் மோடியும் அவ ரது சகாக்களும் உண்மையில் எதைக் குறிப்பிடுகிறார்கள் என்பது இப்போது தெளிவாக தெரிந்து விட்டது.   இதன் அர்த்தம் என்னவெனில், நாட்டை  தொடர்ந்து பிரிவினையில் வைத்திருப்பது, மக்களை தொடர்ந்து பயம் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ நிர்பந்தித்தல், பாதிக்கப்பட்டவர்களை கடுமை யாக குறிவைப்பது, நமது சமூகத்தின் ஒரு  அங்கமாகவும் குடியரசின் சம குடிமகன் களுமாக இருக்கும் சிறுபான்மையினரை கொடூரமாக நடத்துவது என்பதே ஆகும். தேசத் தலைவர்களை கொலை  செய்தவர்கள் இன்று கொண்டாடப்படு கிறார்கள். ஜனநாயகத்திற்கு குரல்  கொடுப்போர் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தப் படுகின்றனர். பேச்சாற்றல்மிக்க பிரதமர், பிரச்சனைகள் வரும்போது மவுனமாகி  விடுகிறார். இந்தியாவின் பன்முகத்தன்மை க்கு இன்று பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.’’ இவ்வாறு சோனியா காந்தி பேசியுள்ளார்.