states

கொச்சி பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை

கொச்சி, ஜன.18- முதல்முறையாக கேரளத்தில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளித்து கொச்சி பல்கலைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. கொச்சியில் உள்ள அறி வியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (குசாட்) மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செமஸ்டரின் வேலை நாட்களில் 2 சதவிகிதம் மாதவிடாய் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழகத்திற்கும், இதை விரிவு படுத்துமாறு இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள கேரளத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மாதவிடாய் விடுமுறையை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப் படும் என்று சமூக நீதித்துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.பிந்து தெரிவித்தார். இதற்கு கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் செயல்படுத்தப்பட்டது முன் மாதிரியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு செமஸ்டரிலும் தேர்வு எழுத 75 சதவிகி தம் வருகைப் பதிவு அவசியம். ஆனால், மாதவிடாய் விடுமுறையை கருத்தில் கொண்டு 73 சதவிகித வரு கைப்பதிவு இருந்தாலும் மாணவிகள் தேர்வு எழுத லாம் என்ற சட்டத் திருத்தத்தை ‘குசாட்’ கொண்டு வந்தது. மற்ற பல்கலைக்கழகங்களிலும் இதை அமல் படுத்தினால், மாணவிகளுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.