சென்னை, பிப்.12- சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் விண்ணப்பத்திற்கான கட்டாய மின்-தாக்கல் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கான ஆன்லைன் சான்றளிக்கப்பட்ட நகல் விண்ணப்பத்திற்கான வலைதளத்தை தலைமை நீதிபதி பொறுப்பு ராஜா தொடங்கி வைத்தார். சென்னை உயர்நீதி மன்றம் இதற்கு முன்பு இ-பைலிங் வசதியை நடைமுறைப்படுத்தியது. இப்போது சென்னை உயர்நீதி மன்றத்தின் முதன்மை இருக்கை யிலும் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையிலும் இ-பைலிங் போர்டல் மூலம் முன்ஜாமீன் விண்ணப்பம் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கற்றறிந்த வழக்கறிஞர்கள் மற்றும் தரப்பினர்கள் இ-பைலிங் போர்ட்டலில் பயனர் கணக்கை உருவாக்க தேவையான விரிவான வழி காட்டுதல்கள் மற்றும் ஒளி காட்சி சென்னை உயர்நீதிமன்றத்தின்
இணை யதள முகப்பு பக்கத்தில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற முதன்மை இருக்கை தீர்ப்புகள், உத்தரவுகள், ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குவதற்காக https://www.mhc.tn.gov.in/eservices/copyapp என்ற ஆன்லைன் சான்றளிக்கப்பட்ட நகல் விண்ணப்ப போர்ட்டலை உருவாக்கி உள்ளது. நீதிமன்றத்தின் முதன்மை இருக்கையில் உள்ள குற்றவியல் வழக்குகளுக்கான நோட்டீஸ்களை மின்னஞ்சல் மூலம் மாநிலத்தின் பல்வேறு நீதிமன்றங்களுக்கு அனுப் புவதற்கான தொகுப்பை யும், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி குற்றவியல் நீதி மன்றங்களில் பாதுகாப்பான வடி வத்தில் மின்னஞ்சல் மூலம் இ-ஜாமீன் பத்திரத்தை அனுப்ப உருவாக்கி யுள்ள தொகுப்பையும் சோதனை அடி ப்படையில் நீதிபதி ராஜா தொடங்கி வைத்தார்.