சென்னை, ஜூலை 14- செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை சட்டப்படியே கைது செய்துள்ளது; சிகிச்சை முடிந்ததும் அமலாக்கத் துறை அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும், இவ்வழக்கில் 3-ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கியுள்ளார். செந்தில் பாலாஜியின் சிகிச்சை நாட்களை அமலாக்கத்துறை காவல் நாட்களாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் நீதிபதி கூறியுள்ளார்.