சென்னை, செப். 15 - நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது என்று செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை பேரம் பேசியதாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வைத்த வாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப் பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி யின் வழக்கை எந்த நீதிமன்றம் விசா ரிப்பது என்பது தொடர்பான பிரச்சனை யில், சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றமே விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ். அல்லி முன்பாக வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறி ஞர் கபில் சிபல், “செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டு களுக்கு முந்தையது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த 9 ஆண்டுகளாக செந்தில் பாலாஜி வரு மான வரியை தாக்கல் செய்துள் ளார். சட்ட விரோதமாக பண பரிமாற் றம் செய்திருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டி ருக்கும்? சட்டவிரோதமாக பணப் பரி மாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை.
வேலைக்காக பணம் கொடுத்ததாக கூறும் யாரும் நேரடியாக செந்தில் பாலாஜியிடம் கொடுக்கவில்லை. அவரின் உதவியாளர்கள் என கூறப் படும் கார்த்திகேயன், சண்முகம் என்ற இருவரிடம்தான் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் கூட சாட்சியாக சேர்க்கப்படவில்லை. செந்தில் பாலாஜி மீது கோபி, பிரபு ஆகிய இருவர் புகாரளித்த னர். அதில் ஒருவர் சாட்சியாக சேர்க்க ப்படவில்லை. மற்றொருவர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற யாரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்க வில்லை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை யாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது?’ என விசாரணையின்போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்டுள்ளது. ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் குற்றம் செய்தாரா, இல்லையா என்பதை விசாரணை அமைப்புதான் நிரூபிக்க வேண்டும்” என்று வாதங் களை வைத்தார். அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், செந்தில் பாலாஜி மீதான வழக்கு அரசியல் பழிவாங்கும் நட வடிக்கை என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துள்ளது” என்று மறுப்பு தெரி வித்தார். அமலாக்கத் துறை விசாரணை முடிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோர முடியாது என்றும் தெரிவித்தார்.