நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக ஆட்சியில் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் முன்னெப்போதும் இல்லாத அடக்குமுறையை எதிர்கொண்டு வருகிறது. இந்திய ஜனநாயகம் பேராபத்தில் உள்ளது. இதனை ஒரு பத்திரிகையாளனாக உணர்ந்து வெளிப்படுத்துகிறேன் என மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் பேசியுள்ளார்.
கோவை வஉசி மைதானத்தில், ‘கலைஞர் நூற்றாண்டு விழா- இத ழாளர் கலைஞர் சிறப்பு புகைப் படக் கண்காட்சி’ துவங்கப்பட்டது. அமைச்சர் சு.முத்துசாமி தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே. எஸ்.மஸ்தான், பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்காட்சியை குமரகுரு கல்வி நிறுவனங்கள் தலைவர் டாக்டர்.பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் திறந்து வைத்தார்.செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்புரையாற்றினார். என்.ராம் இந்நிகழ்வில் மூத்த இதழியலா ளர் இந்து என்.ராம் பங்கேற்று பேசு கையில், “கலைஞர் அவர்கள், பேச்சு சுதந்திரத்தை, எழுத்து சுதந்தி ரத்தை மதித்தார். பத்திரிகையா ளர்கள், ஊடக பிரதிநிதிகள் எப் போது சென்றாலும் அவரை சந்திக் கலாம். “கலைஞர் அவர்கள் ஊட்டி செல்வதற்காக கோயம்புத்தூர் மாவட்ட சுற்றுலா மாளிகையில் தங்கி இருந்தார். பத்திரிகையாளர் கள் அவர்களிடம் காவிரி பிரச் சனை உள்பட பல்வேறு பிரச்சனை களைப் பற்றி கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கலைஞர் அவர்கள் நானும் நிருப ராக இருந்திருக்கிறேன். ஒரு நேரத்தில் ஒரு கேள்வியை கேளுங் கள். அதற்கான பதிலை கூறும் போது, அதை பத்திரிகையாளர் எழுதுவதற்கு நேரம் வேண்டும். எனவே, ஒவ்வொரு கேள்வியாக கேளுங்கள் என கூறினார்” இது தான் அவருடைய சிறப்பாகும். இன்று, மோடி தலைமையி லான ஒன்றிய ஆட்சியில் கருத்துச் சுதந்திரமும், பேச்சு சுதந்திரமும் அபாய நிலையில் இருக்கிறது. ஜனநாயகத்திற்கு ஒரு மோசமான சவாலும், பேராபத்தும் வந்துள் ளது. அரசியலாக இதனை சொல்ல வில்லை.
ஒரு பத்திரிகையாளனாக உணர்ந்து இதனை பதிவு செய்கி றேன். ‘நியூஸ் கிளிக்’ மீதான தாக்கு தல் இன்று நடைபெற்றுள்ளது. பயங்கரவாத சட்டமான ‘உபா’ சட்டத்தில் பத்திரிகையாளர் கைது செய்யப்படுகிறார். பத்திரிகை அலு வலகங்கள் சீல் வைக்கப்படு கின்றன. இது மோசமான நடவ டிக்கை. இதனை எதிர்க்க வேண் டும். மதச்சார்பின்மை, ஜனநாய கம் ஆபத்தான நிலையில் உள்ளது. தமிழ்நாடு இதற்கு விதிவிலக்காக உள்ளது. பாஜக தலைவர் அண்ணா மலை வாயில் வந்ததையெல்லாம் உளறிக்கொண்டு செல்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் பழிவாங் கும் நடவடிக்கை எடுக்கப்படுவ தில்லை. அவர் மீது எந்த கைது நட வடிக்கையும் எடுக்கப்படுவ தில்லை. மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை. எனவே, ஆபத்தி லுள்ள கருத்துச் சுதரத்திரத்தை, மதச்சார்பின்மையை நாம் பாது காக்க வேண்டும். ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையை பாது காக்கும் நடவடிக்கையிலும், சமூக நீதியை பாதுகாப்பதிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக செயல்படுகிறார். அவருக்கு துணையாக நாம் இருக்க வேண்டும்” என்றார். இந்நிகழ்வில், செய்தி மக்கள் தொடர்பு அரசு இணைச் செயலா ளர் த.மோகன், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகர காவல் ஆணையர் வி.பால கிருஷ்ணன், ஊடகவியலாளர்கள் ‘நக்கீரன்’ கோபால், பாபுஜெய குமார் (டெக்கான் க்ரோனிக்கல் நாளிதழ்) அருண்ராம் (டைம்ஸ் ஆப் இந்தியா) கோவி.லெனின், எம்.குணசேகரன் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.