இந்தியாவில் நடை பெறும் ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி களின் அட்டவணை ஜூன் 27 அன்று வெளி யாகிறது என சர்வதேச கிரிக்கெட் வாரியம் அதி காரப்பூர்வமாக அறி வித்துள்ளது.
சென்னை கேளம்பாக் கத்தில் குப்பை அள்ளும் வாகனத்தை இயக்கிய தூய்மை பணியாளர் விஜய்யின் (20) தலை யில் குப்பை கழிவு டிப்பர் விழுந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் உயி ரிழந்தார்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அனுமதி இல்லாத கட்டிடத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்பிஜி எரிவாயு கிடங்கு செயல்படுவதை தடுக்கக் கோரிய வழக்கில், தமிழ் நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய் குறித்து அவ தூறாக பதிவிட்டதாக விஜய் மக்கள் இயக்கத் தினர் சென்னையில் புகார் அளித்திருந்த நிலையில், சிறையில் உள்ள பாஜக ஆதரவாளர் உமா கார்த்திகேயன் கோவையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஏற்கனெவே பெரியார், கலைஞர் குறித்து உமா கார்த்திகேயன் அவதூறு பரப்பியதாக திமுகவினர் அளித்த புகார் அடிப்படையில் உமா கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது புதிய வழக்கிற் காக உமா கார்த்திகே யனை கோவை சிறையிலி ருந்து காவல் துறையின ரால் சென்னை அழைத்து செல்லப்பட்டார்.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் பாக்கரா பேட்டை போலீசார் நடத்திய சோதனையில் ரூ.32 கோடி மதிப்பிலான 33 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட் டன. செம்மரங்களை கடத்த பயன்படுத்திய 5 கார்கள், ஒரு இருசக் கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு செம்மரக் கட்டைகள் கடத்திய 4 தமிழர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி களை அருகே உள்ள பெண் மாஜிஸ்திரேட்டி டம் ஆஜர்படுத்தி வாக்கு மூலம் பெறவும், இதனை முறையாக பின்பற்ற அனைத்து காவல் நிலை யங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள் ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப் பட்ட நிலையில், வெள் ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் 20 முக்கிய சாலைகள் துண்டிக்கப் பட்டதால் மாநிலம் முழு வதும் ஒரு சில இடங்க ளில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட் டம் மண்டபம் அடுத் துள்ள வேதாளை கடற் கரை பகுதியில் 67 மூட்டைகளில் சுமார் ஒரு டன் எடை கொண்ட கடல் அட்டைகளை கட லில் வீசிவிட்டு தப்பித்து சென்றது கடத்தல் கும்பல்.
உலகச் செய்திகள்
பிரான்சின் தலைநகர் பாரீசில் நடைபெற்ற உலக நிதி அமைப்புக் கூட்டத்தில் எந்தவொரு முக்கியமான முடிவும் எடுக்கப் படவில்லை. சர்வதேச நிதி அமைப்பை சீர்திருத்தம் செய்யும் வகையில் சில முன்மொழிவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அப்படிப்பட்ட ஆலோசனைகள் முன்வைக்கப்பட வில்லை. இந்த உச்சி மாநாடுகளுக்கு ஏற்பாடு செய்த பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ‘‘உலக நிதி அமைப் பை மறு பரிசீலனை செய்யும் பணி விரைவில் நடக்கும்’’என்றார்.
தனது தலைநகர் கிகாலியில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை இயக்க ருவாண்டா அரசு முடிவெடுத்திருக்கி றது. இதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்த விவோ எனர்ஜி என்ற நிறுவனத்துடன் உடன்பாட்டை எட்டியிருக்கி றார்கள். 200 பேருந்துகளை முதல்கட்டமாக அந்த நிறுவனம் ருவாண்டாவுக்கு வழங்கும். தலைநகரில் பொதுப் போக்குவரத்தை பெரும் அளவில் மேம்படுத்த இது உதவும் என்று ருவாண்டா வளர்ச்சிக் கழகம் தெரிவித்திருக்கிறது.
5ஜி தொழில்நுட்ப சேவை அதிகாரப்பூர்வமாகத் தரத் தொடங்கு வதாக புருனே அரசு அறிவித்துள்ளது. அந்நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று நிறுவனங்கள் இணைந்து இந்தத் சேவையை வழங்கவிருக்கின்றன. புருனேயில் 90 விழுக்காடு பகுதிகளில் தொலைத் தொடர்புக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகள் 5ஜி தொழில்நுட்பத்திற்கும் தயாராக உள்ளன.