states

காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை, ஜூலை 4 - தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், இவ ரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் கொரோனா ஊரடங்கின் போது அனு மதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் செல் போன் கடையை திறந்து வைத்திருந்த  தாக கூறி சாத்தான்குளம் போலீ சாரால் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட னர்.  பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தந்தை, மகனை காவல் நிலையத்தில் அடித்து சித்ரவதை செய்து கொலை செய்தது தொடர்பான இவ்வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ் ணன், ரகுகணேஷ் உட்பட 9 பேரை  சிபிஐ கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது. இவர்களில் காவல் ஆய் வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்த போது, சிபிஐ தரப்பில் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. இதையடுத்து, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.