ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ் கோவின் 45-வது கூட்டம் சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் மேற்குவங்க மாநிலம் பிா்பூம் மாவட்டத்தில் அமைந்துள்ள சாந்திநிகேதன் பல்க லைக்கழக நகரம் யுனெஸ்கோவின் உல கப் பாரம்பரிய சின்னங்களுக்கான பட்டிய லில் சேர்க்கப்பட்டுள்ளது. சாதி, இனம் உள்ளிட்ட வேறுபாடுகளைக் களைந்து தியானம் செய்வதற்கான ஆசிரமம் என்ற பெயரில் கவிஞா் ரவீந்திரநாத் தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூரால் சாந்தி நிகேதனில் 1921-இல் நிறுவப்பட்டது விஸ்வ பாரதி கல்வி நிலையம். இது சுதந்தி ரத்துக்கு முன் கல்லூரியாகச் செயல்பட்ட நிலையில், 1951 முதல் மத்திய பல்க லைக்கழகமாகச் செயல்பட்டு வருகிறது. சாந்திநிகேதன் மூலம் இந்தியாவில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. சாந்திநிகேதன் உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டுள் ளது தொடர்பாக பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உள்ளிட்ட தலைவா்களும் வாழ்த்து தெரிவித்துள்ள னர்.