சென்னை, ஜன.7- தமிழகத்தில் வனப் பகுதியை யொட்டியுள்ள பகுதிகளில் குவாரி கள் இயங்குவதற்கான விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரி வித்து வரும் நிலையில் அமைச்சர் துரை முருகன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சிறு கனிம விதிகளில் பேரவை யில் அறிவித்தபடி திருத்தம் மேற் கொள்ளப்பட்டது. எனினும் தேசியப் பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகம் மற்றும் யானை வழித்தடங்கள் ஆகியவற்றிலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவுக்குள் குவாரிப் பணிகளுக்கான தடை தற்போதும் நீடிக்கிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறி முறைகளில், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்க ளில் சுரங்கப் பணிகளுக்கு அனுமதிய ளிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட காடுகள் என்பதன் பொருள், சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்கள் ஆகும். காப்புக் காடுகள் அல்ல. எனவே, கடந்த டிச. 14-ம் தேதி வெளியான திருத்தம் மூலம், காப்புக் காடுகளின் எல்லைகளில் இருந்து 60 மீட்டர் சுற்றளவுக்குள் எந்தவித குவாரிப் பணி அல்லது சுரங்கப் பணியும் மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையுடன், குத்தகை உரிமம் வழங்கப்படும். ஏற்கெனவே இயங்கி வந்த குவாரிகளும் செயல்படலாம். உச்ச நீதிமன்றம், வனத்துறை அமைச்சக வழிகாட்டுதல்களில் சரணா லயங்கள், தேசியப் பூங்காக்களுக்கு மட்டுமே இடைவெளி தேவை என்று குறிப்பிட்டுள்ளன. காப்புக் காடுகள் குறித்து தெரிவிக்கவில்லை. எனினும், 2021 நவ. 3-ம் தேதிக்கு முன்பிருந்த காப்புக் காடுகளுக்கான பாதுகாப்பு இடைவெளி தற்போதும் பின்பற்றப் படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.