states

ஆபாச வீடியோக்களை வெளியிட்ட ஆர்எஸ்எஸ் மாணவர் கைது!

பெங்களூரு, ஜூன் 21- இளம்பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த, ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவான ஏபிவிபி (ABVP)-யைச் சேர்ந்த நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார். கர்நாடகா மாநிலம் தீர்த்தஹல்லி பகுதியில் ஏபிவிபி அமைப்பின் நிர்வாகியாக இருப்பவர் பிரதீக் கவுடா. இவர் அப்பகுதியில் உள்ள சில கல்லூரி மாணவிகள், இளம் பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு அதை புகைப் படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து வைத்துள்ளார். பின்னர், இந்த அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் இணையத்தில் பரப்பியுள்ளார். இந்த வீடியோக்கள் ஷிமோகா மற்றும் அதை சுற்றி யுள்ள பகுதிகளில் உள்ள வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இது, சம்பந்தப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை யும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இதுபற்றி, காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான என்எஸ்யுஐ பிரதீக் மீது காவல்துறையில் புகார் அளித்தது. இளம்பெண்கள், மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களை வைத்து பிரதீக், மாணவிகளை பிளாக் மெயில் செய்து வருவதாக புகாரில் தெரிவித்திருந்தது. அதன் பேரில், ஷிமோகா போலீசார் வழக்கு பதிவுசெய்து, பிரதீக்கை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்துள்ளனர். மேலும், இத்தகைய வீடியோக்கள், புகைப்படங்களை பகிரும் நபர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் எனவும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் கண்காணிக்கப்படுவதாகவும் குழுக்களின் அட்மின்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.