states

டோக்கன் வாங்காதவர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு

சென்னை,ஜன.6- அரசின் சார்பில் குடும்ப அட்டை தாரர்களுக்கு சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கப்பணம் ரூ.1000 நியாயவிலை கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வருகிற 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பொங்கல் தொகுப்பு பெறும் வகையில் வீடு வீடாக ரேசன் கடை பணியாளர்கள் டோக்கன்  வழங்கி வருகின்றனர். எந்த நாளில்  எந்த நேரத்தில் கடைக்கு வந்து  ரொக்கப்பணம் பெற வேண்டும்  என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கி  மாலை 6 மணி வரை பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. தின மும் 200 முதல் 300 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக டோக்கன்கள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று டோக்கன் விநியோகிக்கும் போது கதவு பூட்டப்பட்டு இருந்தாலோ, வெளியூர் சென்று இருந்தாலோ வழங்க முடியாமல் போகிறது. இதுபோன்ற காரணத்தால் டோக்கன் கிடைக்காதவர்களுக்கு பொங்கல் தொகுப்பு கிடைக்கா மல் போய்விடுமோ என்று பயப் படத்தேவையில்லை.

அனை வருக்கும் பொங்கல் தொகுப்பிற் கான பணம், பொருட்கள் கடை களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை டோக்கன் பெற  முடியாத நிலையில் இருந்த வர்களுக்கும் விடுபட்டு போனவர்க ளுக்கும் தனியாக பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. 13 ஆம்  தேதி (வெள்ளிக்கிழமை) ரேசன்  கடைகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். ரூ.1000 ரொக்கம் மற்றும் பொங்கல் பொருட்கள் பெறக்கூடிய குடும்ப அட்டை உறுப்பினர்கள், கைரேகை பதிவு செய்து பெற வேண்டும். ரேசன் கடைக்கு வர இயலாத நிலையில் உள்ளவர்கள் அவர்களின் அத்தாட்சி கடிதம் பெற்று வந்து ஒருவர் தொகுப்பை பெறலாம் என்று அதிகாரிகள் தெரி வித்தனர். 14 ஆம் தேதி முதல் 17 ஆம்  தேதி வரை தொடர் விடுமுறை என்ப தால் ரேசன் கடைகள் இயங்காது.