states

பள்ளி, கல்லூரிகளில் சாதி பாகுபாடுகளை களைய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு!

சென்னை, ஆக. 12 -  நாங்குநேரியில் பிளஸ் 2 மாணவர்கள் அரங்கேற்றிய சாதிய கொலைவெறித் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகளில் உள்ள சாதிய பாகு பாடுகளைக் கண்டறிந்து, அவற்றைக் களைவது தொடர்பான வழிமுறைகளை வகுக்க, ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டா லின் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவர்  மற்றும் அவரது குடும்பத்தினர், சக மாண வர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியது.  சாதி, மத, பேதங்களைக் கடந்து மனித நேயத்துடன் ஒரு சமுதாயத்தைப் படைத்து,  அனைத்துத் தரப்பு மக்களும் சமூகப் பொரு ளாதார வளர்ச்சி பெற வேண்டுமென்ற நோக்கில் இந்த அரசு செயலாற்றி வரு வதை மக்கள் அறிவார்கள். இச்சூழ்நிலை யில், இதுபோன்ற ஒரு சம்பவம் என்னை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.  எதிர்கால சமுதாயம் சாதி, மதம் போன்ற  பிற்போக்குச் சிந்தனைகளற்று, சகோதர உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும்; புதிய  தமிழ்நாடு படைத்திட வேண்டும் என்றெல் லாம் எண்ணி கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புப் பெருக்கம் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் கழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில், நாங்குநேரி சம்பவம் மூலம் சாதி, இனப் பிரச்சனைகளில் பள்ளி,  கல்லூரி மாணவர்களில் சில பகுதியினர் தேவையற்ற வகையில் ஈடுபட்டு வருகின்ற னர் என்ற கசப்பான உண்மை நமக்குத் தெரிய வருகிறது.  இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்ட வுடன், நிதி மற்றும் மனிதவள மேலாண் மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவர் குடும்பத்தினரைச் சந்தித்து, ஆறுதல் கூறி வர அனுப்பி வைத்தேன். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய் யாமொழி அம்மாணவனின் உயர்கல்விச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.  இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இது  உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய  ஒரு முக்கியமானப் பிரச்சனை என்பதால்,  இதில், அரசு எந்த வகையான நடவடிக்கை களை மேற்கொள்வது என்பது குறித்தும்,  பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு  சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதியரசர் கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். இந்தக் குழு, மேற்படி பொருள் தொடர்பாக கல்வியாளர்கள், மாண வர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனை யாளர்கள், பத்திரிகைத் துறையினர் என  பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக் களைப் பெற்று அதனடிப்படையில் அர சுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்தி டும். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.