சென்னை, செப். 5- எண்ணும் எழுத்தும் செயல்திட்ட ஆய்வு பணியை முதுகலை ஆசிரி யர்கள் மீது திணிப்பதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் இரா.பெருமாள் சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாண வர்களுக்கு செயல்படுத் தப்படும் எண்ணும் எழுத்தும் என்ற செயல் திட்டத்தை ஆய்வு செய்யும் பணிக்காக ஏறத்தாழ 800 முதுகலை ஆசிரியர்களை பயன் படுத்த கல்வித்துறை உத்தர வுகளை பிறப்பித்துள்ளது. 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதே பெரும் சவாலாக உள்ளது. மேலும் செப்டம்பர் 15 முதல் காலாண்டு தேர்வும் நடை பெற உள்ளது. பல மாவட்டங்களில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கு மதிப்பீடு தேர்வு கள் அவ்வப்போது நடத்தப் படுகிறது. கல்வி மேலாண்மை தகவல், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை பணி மற்றும் 14 வகையான அரசு நலத் திட்டங்கள் போன்ற பணி களை கற்றல் கற்பித்தல் பணியுடன் சேர்ந்து கூடுத லாக முதுகலை ஆசிரியர் கள் செய்து வருகிறார்கள். எண்ணும் எழுத்தும் செயல் திட்ட ஆய்வு பணியையும் முதுகலை ஆசிரியர்கள் மீது திணிப்பதால், ஆசிரியர்கள் மனதளவிலும் உடல் அளவி லும் சோர்வடைகிறார்கள். முதுகலை ஆசிரியர் களை ஒருங்கிணைப்பாள ராக கொண்டு பயிற்சி மாண வர்களை மதிப்பீட்டு பணி யில் ஈடுபடுத்துவதை ஏற்க இயலாது. எனவே உடனடி யாக பள்ளிக் கல்வித்துறை எண்ணும் எழுத்தும் செயல் திட்ட ஆய்வு பணியினை முதுகலை ஆசிரியர்கள் மீது திணிப்பதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைபட்டதாரி ஆசிரி யர் கழகம் கேட்டுக்கொள் கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.