ராஞ்சி, ஜூன் 10- ஜார்க்கண்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை, சிறுமியின் பெற்றோர் தீ வைத்து கொளுத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கும்லா பகுதியைச் சேர்ந்த சிறுமியும் பெற்றோரும், அருகில் உள்ள கிராமத்தில் நடந்த திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். அப் போது, பேருந்து கிடைக்காத தால், அந்த வழியாக பைக்கில் சென்ற குல்மா பகுதியைச் சேர்ந்த இருவரிடம் சிறுமியை ஏற்றிச் செல்லுமாறு பெற்றோர் கூறி உள்ளனர். ஆனால், அந்த இருவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரி கிறது. இதனை பெற்றோரிடம் சிறுமி கூறிய நிலையில், ஆத்திர மடைந்த பெற்றோரும் உற வினர்களும், சம்பந்தப்பட்ட இரு வரையும் கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும், அவர்கள்மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி பைக்குடன் தீ வைத்து உள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலை யில், மற்றொரு நபர் தீக்கா யங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.