சென்னை, அக்.21- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இல்லத்திலிருந்து தலை மைச்செயலகம் செல்லும் வழியில் 20 அடிக்கு ஒரு காவலர் என்ற வகை யில், பாதுகாப்பிற்காக போக்கு வரத்தை சீர் செய்ய நிற்பது வழக்கம். காவலர்களுடன், போக்குவரத்து காவலர்களும் பணியில் ஈடுபடுவார் கள். தலைமை செயலகத்திலிருந்து இல்லம் நோக்கி புறப்படும் போது, அவர் செல்லும் பாதையில் போக்கு வரத்து சீர் செய்து எளிதில் ‘கான் வாய்’ வாகனம் செல்ல வழிவகை செய்யப்படுவதோடு, எதிர் திசை யில் செல்லும் வாகனங்கள் வழக்க மாகவே செல்லும். இந்த நிலையில், முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, சாலை பாதுகாப்பிற்காக நிற்கக் கூடிய காவலர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய சந்திப்புகளில் மட்டும் கான்வாய் செல்லும் நேரத்தில், போக்குவரத்தை சீர் செய்யவும் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கான்வாய் செல்லும் நேரத்தில் மட்டும், கிரீன் சிக்னல் போடப்பட்டு எளிதில் வாகனம் செல்லவழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆழ்வார்பேட்டையிலிருந்து தலைமை செயலகம் வரை 60 சந்திப்புகளில் காவலர்கள் நிற்பது வழக்கம். இதனை குறைக்க முதலமைச்சர்அறிவுறுத்தியதின் பேரில் அது தற்போது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.