states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பிரதமர் பதவி: சஜித் பிரேமதாசாவும் களமிறங்கினார்!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைவரும், இலங்கை எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேம தாசா, தனது தலைமையில் புதிய அரசாங்கம் அமைப்பதற்கு விருப்பமில்லை என்று கூறி வந்தார். இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே புதிய பிரதம ராக பொறுப்பேற்பார் என்று தகவல்கள் வெளியான நிலையில், திடீரென “இலங்கையில் இடைக்கால அரசாங்கம் மற்றும் பிரதமர் பதவியை ஏற்று நடத்தத் தயார்” என்று ஜனாதிபதி கோத்தபய ராஜ பக்சேவுக்கு, சஜித் பிரேமதாசா கடிதம் எழுதியுள்ளார்.

52 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு!

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிர தேசம், கர்நாடகம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட், பீகார், ஜார்க்கண்ட், ஹரி யானா ஆகிய15 மாநிலங்களில் மொத்தம் 52 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 11 இடங்களுக்கும், மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் தலா 6 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு 123 உறுப்பினர்கள் தேவை. ஆனால், பாஜகவுக்கு தற்போது வரை 101 உறுப்பினர்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் சிறப்பு மாநாடு இன்று துவங்குகிறது!

காங்கிரஸ் கட்சியின், மூன்று நாள் ‘சிந்தனை அமர்வு’, ராஜஸ்தான் மாநிலத்தில் வெள்ளிக்கிழ மையன்று துவங்குகிறது. பிற்பகல் 2 மணிக்கு துவங்கும் நிகழ்வில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உரையாற்றுகிறார். இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுல் காந்தி பேசுகிறார். 2022-ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள குஜராத், இமாசல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்கள், 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் குறித்து இந்த சிந்தனை அமர்வில் வியூகங்கள் வகுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பலத்த அடிவாங்கிய இந்தியப் பங்குச் சந்தைகள்! 

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் புதனன்று 54,088.39 புள்ளி களில் முடிவடைந்து இருந்தது. இந்நிலையில், வியாழனன்று 53,608.35 புள்ளிகளில் துவங்கிய வர்த்தகம், வர்த்தகநேர முடிவில் 1,158.08 புள்ளிகளை இழந்து 52,930.31 புள்ளி கள் என்ற அளவிற்கு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதேபோல 16,021.10 புள்ளிகளில் வர்த்த கத்தைத் தொடங்கிய தேசியப் பங்குச் சந்தைக் குறியீடான ‘நிப்டி’யும் வர்த்தக நேர முடிவில் 359.10 புள்ளிகளை இழந்து 15,508.00 புள்ளிகளுக்கு இறங்கியது.

தாஜ்மகால் அறைகளை திறக்கக் கோரும் மனு தள்ளுபடி!

தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் இந்து கடவுளர்களின் சிலை கள் இருப்பதாகவும், எனவே, அவற்றை திறந்து சோதனையிடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அயோத்தி பாஜக செய்தித் தொடர்பாளர் டாக்டர் ரஜ்னீஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார். தேஜாலாயா எனும் சிவன் கோயிலை இடித்துத்தான் தாஜ்மகால் கட்டப்பட்டதாகவும் அவர் தெரி வித்திருந்தார். இந்நிலையில், “முற்றிலும் நியாயமற்ற பிரச்சனையில் தீர்ப்பளிக்க மனுதாரர் எங்களை அழைத்துள்ளார்” என்று கூறி, ரஜ்னீஷ் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

‘கியூட்’ தேர்வுக்கு இதுவரை 9.81 லட்சம் பேர் விண்ணப்பம்!

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் சேர்க்கை பெற ‘கியூட்’ (CUET) எனப்படும் நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு கட்டாயம் ஆக்கி யுள்ளது. என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த  தேர்வு, ஜூலை முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு மே 22 வரை விண்ணப் பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இதுவரை நாடு முழுவதும் 9 லட்சத்து 81 ஆயிரத்து 406 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், 7 லட்சத்து 39 ஆயிரத்து 027 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

பாகிஸ்தானுக்கு ‘உதவிய’ இந்திய விமானப் படை வீரர்!

இந்திய விமானப்படையில் பணியாற்றி வரும் தேவேந்திர சர்மா என்பவர், பாகிஸ்தான் உளவு  அமைப்பான ஐஎஸ்ஐ-யிடம் இந்திய விமானப் படையின் தகவல்களை பரிமாற்றம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட தேவேந்திர ஷர்மா மனைவியின் வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதையும் தில்லி குற்றப்பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். 

பசி என்று வந்த சிறுவனை கொன்று வீசிய போலீஸ்காரர்!

மத்திய பிரதேச மாநிலம் தாடியா கோத்வாலி பகுதியைச் சேர்ந்தவர் மயாங்க் சென் (வயது 6). இவ ரது தந்தை சலூன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சிறுவன் மயாங்க் சென், அங்கு நடைபெற்ற கோயில் விழா பாதுகாப்பிற்கு வந்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ரவி சர்மா என்பவரிடம் வயிறு பசிப்பதாக கூறி உணவு கேட்டுள்ளார். இதற்காக கான்ஸ்டபிள் சிறுவன் மயாங்க் சென்-னின் கழுத்தை நெரித்துக் கொன்று, உடலை ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் வீசியுள்ளார். இந்த ஈவிரக்கமற்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கும் நிலையில், கான்ஸ்டபிள் ரவி சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதவிடாயின் போது துணியையே பயன்படுத்தும் பெண்கள்

மாதவிடாய் காலங்களில் 15 முதல் 24 வயது வரையிலான பெண்கள் எந்த விதமான பாது காப்பு முறைகளை பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து 2019 முதல் 2021 வரை தேசிய  குடும்பநல சுகாதார ஆய்வு (NRHS) மேற்கொள்ளப்பட்டது. 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன்  பிரதேசங்களில் 707 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 7 லட்சம் பெண்களிடமும் 1 லட்சம் ஆண்களிட மும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவில், 15 முதல் 24 வயதுடைய பெண்களில் சுமார் 50 சத விகிதம் பேர் இன்றும் மாதவிடாய் காலங்களில் நாப்கினுக்கு பதில் துணிகளையே பயன்படுத்து வது தெரியவந்துள்ளது.

கொள்ளையடிக்கவே பாஜக ஆட்சிக்குவரத் துடிக்கிறது

குஜராத் மாநிலம் ராஜகோட்டில் நடைபெற்ற ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றியுள்ளார். அதில், “பாஜக பணக்காரர்களின் கட்சி. கொள்ளையடிக்கவே அந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறது. தில்லியில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களில் 450 பேர் ஐஐடி-யில் சேர்க்கை பெற்றுள்ளனர். ஆனால், குஜராத்தில் 27 ஆண்டுகளில் பாஜக ஏழை மற்றும் நடுத்தர குழந்தைகளுக்காக எத்தனை பள்ளிகளை கட்டியது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் 19 சதவிகிதம் பேருக்கு கழிப்பறை இல்லை!

‘சுவச் பாரத்’ என்ற திட்டத்தை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி திறந்தவெளியில் மலம் கழித்த லற்ற நாடாக இந்தியா மாறிவிட்டது. என்று கடந்த 2019-ஆம் அவருக்கு அவராகவே பிரகடனப்  படுத்திக் கொண்டார். ஆனால், 2019-21 ஆம் ஆண்டிலும், நாட்டில் இன்னும் 19 சதவிகிதம் பேருக்கு கழிப்பறை வசதியில்லை என்பது, தேசிய குடும்பநல சுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது. கழி வறை பயன்பாட்டில் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்கள் மிகவும் பின்தங்கி இருப்பதும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் நாணய மதிப்பு பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. அரசியல் மற்றும் பொருளா தாரம் உறுதியில்லாத நிலையில், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 189ஐத் தொட்டுவிட்டது. பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் வசம் 328 மில்லியன் அமெரிக்கா டாலர் இருப்பு உள்ளது. டாலரின் மதிப்பு தொடர்ந்து  அதிகரித்தால் பாகிஸ்தானின் ரூபாய் மீதான நம்பிக்கையைக் குலைத்து விடும் அபாயம் இருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மே 15 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 39 வேட்பாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என்ற சோமாலியாவின் நாடாளுமன்றக் கூட்டுக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பதிவுக்கான இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. 39 வேட்பாளர்களில் ஒரேயொருவர் மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது. சோமாலியா நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளில் உள்ள உறுப்பினர்கள் இணைந்து புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வார்கள். 

15வது பிரிக்ஸ் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா விடுத்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாக அர்ஜெண்டினா அறிவித்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் அமைப்பு வீடியோ வழியாகத் தனது மாநாட்டு நிகழ்வுகளை நடத்தவுள்ளது. சீனாவின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த மாநாட்டிற்கு அழைப்பாளராக வர வேண்டும் என்று அர்ஜெண்டினாவுக்கு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்திருந்தார்.