u ஹமாஸ்-பாலஸ்தீன போர் நிறுத்தம் மேலும் இரு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என கத்தார் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜோ பைடன் உட்பட பல தலைவர்களும் இதனை வரவேற்றுள்ளனர்.
u அமெரிக்காவின் உயர் நாடாளுமன்ற சபையான செனட்டின்உறுப்பினர் கிரிஸ் மர்ஃபி இஸ்ரேலுக்கு எல்லையின்றி ஆயுதங்கள் அனுப்பக்கூடாது என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் மேலும் நிர்ப்பந்தம் பைடன் மீது உருவாகிறது. ஆனால் பைடன் ஏற்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
u அமெரிக்காவில் மூன்று பாலஸ்தீன மாணவர்களை துப்பாக்கியால் சுட்ட ஜேசன் ஈட்டன் எனும் நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மறுபுறத்தில் ஒரு இஸ்லாமிய நபர் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் பள்ளி குழந்தைகள் மீது கத்திகுத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த இரண்டு செயல்களுமே இன அடிப்படையிலான வெறுப்பு செயல் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உலகின் பல பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புபிரச்சாரமும் அதே போல யூத வெறுப்பு பிரச்சாரமும் நடப்பது கவலைஅளிப்பதாக உள்ளது என மனித உரிமைகள் அமைப்புகள் கூறியுள்ளன. uகாசா பகுதியில் இஸ்ரேல் படையினர் ஐ.நா.வால் தடைசெய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தினர் எனவும் அதனால் தீக்காயங்கள் அடைந்தஏராளமான குழந்தைகளுக்கு மயக்க மருந்து கூட இல்லாமல் அறுவை சிகிச்சை செய்தோம் எனவும் லண்டன் திரும்பிய பிரிட்டன் மருத்துவர் கஸ்ஸான் அபு கூறியுள்ளார். சாலைகளில் வாகனத்தில் செல்லும் பொழுது கட்டிடங்களி லிருந்து பிணவாடை வீசுவதிலிருந்து தப்ப இயலாது எனவும் காசாவின் சில பகுதிகள் திறந்தவெளி கல்லறையாக உள்ளன எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
u நவம்பர் 27 அன்று வெள்ளை மளிகை முன்பு காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் கோரி பெரும் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் புகழ்பெற்ற டோனி/ எம்மி/ கிராமி விருதுகள் பெற்ற சிந்தியா நிக்சன் உட்பட பல்லாயிரக்கணக்கான வர்கள் பங்கேற்றனர்.
u ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட டேனியல் அலோனி எனும் பெண் தன்னையும் தனது குழந்தையையும் ஹமாஸ் அமைப்பினர் சிறந்த முறையில் அபரிமிதமான மனித நேயத்துடன் நடத்தினர் எனவும்
தனது குழந்தை எமிலி அங்கு தேவதை போல நடத்தப் பட்டார் எனவும் எழுத்து மூலமாக பதிவு செய்துள்ளார்.
u அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் சென்று தாக்குதல் நடத்திய பொழுது பல குழந்தைகளின் தலைகளை வெட்டினர் என இஸ்ரேலின் ஒரு ராணுவ வீரர் கூறியதாக பல ஊடகங்களும் அபரிமித பொய் பிரச்சாரம்செய்தனர். நம்மூரில் புகழ்பெற்ற பர்கா தத் கூட இதனை அப்படியே தனது ஊடகத்தில் ஒளிபரப்பினார். ஆனால் பின்னர் இதில் உண்மை இல்லை என்பது தெரிய வந்தது.அமெரிக்க ஜனாதிபதி பைடனும் இதே பொய்யை தனதுநாட்டு மக்களுக்கு உரையாற்றிய பொழுது கூறினார். அந்தஉரையை இறுதிபடுத்தும் பொழுது இந்த செய்தியை இஸ்ரேலிய அரசு உறுதிப்படுத்தவில்லை எனவும் அதனை நீக்கிவிடுமாறும் அவரது உரை தயாரிப்பாளர்கள் வற்புறுத்தியும் பைடன் நிராகரித்து அந்த பொய்யை கோடிக்கணக்கான அமெரிக்கர்களுக்கும் உலக மக்களுக்கும் கூறினார் என்பது இப்பொழுது அம்பலமாகியுள்ளது. பேரழிவு ஆயுதங்கள் உள்ளன என பெரும் பொய்யை சொல்லி இராக் எனும் தேசத்தையே துவம்சம் செய்த அமெரிக்கா வுக்கு இந்த பொய்யெல்லாம் எம்மாத்திரம்?