சென்னை, மே 18- நீலகிரி மாவட்டம், கூடலூர் - பந்த லூர் வருவாய் வட்டங்களில் வனப்பகுதி களில் வசிக்கும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பல்லாண்டு கால மாக மின் இணைப்பு வழங்கப்பட வில்லை. வன விலங்குகள் மத்தியில் அச்சத்துடன் வாழ்ந்து வரும் இம்மக்க ளுக்கு மின் இணைப்பு வழங்கி, நீண்ட கால கோரிக்கையினை நிறைவேற்றித் தர வேண்டுமெனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மே 17 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் வருவாய் வட்டங்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான வீடு களுக்கு நீண்டகாலமாக மின்சார வசதி இல்லாமல் உள்ளது.
கூடலூர்- பந்தலூர் பகுதியின் ஜென்மம் நிலப்பிரச்சனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதை ஒரு காரணமாக காட்டி மின்சார இணைப்பு வழங்காமல் மறுக்கப்பட்டு வருகிறது. அடர் வனங்கள் சூழ்ந்துள்ள பகுதியில், வன விலங்குகளுக்கு மத்தி யில் வாழ்கிற மக்களுக்கு மின்சார இணைப்பு என்பது மிகவும் அத்தியாவசி யமானதொரு அடிப்படை தேவையா கும். மின்சார இணைப்பு இல்லாததால் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள தோடு, முதியோர் மற்றும் நோயாளி களை பராமரிப்பதும் இயலாததாக உள்ளது. ஏற்கனவே, தமிழக முதல்வராக கலைஞர் இருந்தபோது, அப்பகுதி யில் மின்சார இணைப்பு இல்லாத வீடு களுக்கு மின் இணைப்பு வழங்குவதற் காக பிரத்யேகமாக ஒரு உறுதிமொழி பத்திரம் (Affidavit) பெற்றுக்கொண்டு வழங்குமாறு உத்தரவிட்டதன் அடிப்ப டையில் ஆயிரக்கணக்கான வீடு களுக்கு மின்சார இணைப்பு வழங்கப் பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலை யொட்டி நடைபெற்ற காரமடை கூட்டத் தில் தாங்கள் பங்கேற்று உரையாற்றும் போதும் திமுக ஆட்சி அமைந்தவுடன் கூடலூர் - பந்தலூர் மக்களுக்கு மின்சார இணைப்பு உறுதியாக வழங்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளதால் அப் பகுதி மக்களுக்கு தங்கள் துயரம் தீர்க்கப்படும் எனும் நம்பிக்கை ஏற்பட் டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு இப்பிரச் சனையில் உடனடியாக தலையிட்டு கூட லூர் மற்றும் பந்தலூர் பகுதியில் வசிக் கும் மக்களுக்கு மின்சார இணைப்பு வழங்கிட உரிய ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.