states

தனித்து வாழும் பெண்களுக்கு முன்னுரிமை அவசியம்!

2016-ல் தேசிய பெண்கள் கொள் கைக் குறிப்பு முன்வடிவிலும், 2021-ல் தமிழக அரசின் பெண்கள் கொள்கை குறிப்பிலும் தனித்து வாழும் பெண்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. நம் நாட்டில் 2021-ல் 7 கோடியே 30 லட்சம் தனித்து வாழும் பெண்கள் உள்ளதாக புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது. இவர்கள் எதிர்கொள்ளும் சமூக பொருளாதார மற்றும் கலாச்சார சவால்கள் கடுமை யானவையாக நீடிக்கின்றன. “குடும்ப வன்முறையால் பாதிக்கப் பட்டு எங்களிடம் வருவோரில் 40 சதவீதம் பெண்கள் தனித்து வாழ்பவர்கள்” இவர்கள் நிலை மிகவும் துயரகரமானது. வீட்டை விட்டு வெளியேறும் பெண் தங்குவதற்கு உடனடியாக இடம் கிடை யாது. இவர்களது சான்றிதழ், நகை  போன்றவையும் கணவரால் தரப்படுவ தில்லை. நிராதரவாக நிற்கும் இவர்கள் மீது சமூகம் பார்க்கும் பார்வை வேதனைக் குரியது.

தனித்து வாழும் பெண்கள் பலவீன மானவர்கள், கட்டுப்பாடு இல்லாத வர்கள் என்ற பார்வை உள்ளது. இந்த சவால்களை அவர்கள் பெரும் வேதனை யுடனும், சிரமத்துடனும் எதிர்கொள்கின்ற னர். இவர்களால் கொஞ்ச நாள்தான் தனி யாக இருக்கமுடியும் என்ற எண்ணம் பல ரிடம் இருக்கிறது. அதனால் அவர்களுக்கு தனி அடையாளம், சுயசார்புடன் இருப்ப தற்கான வாய்ப்புகளும் வழங்க வேண்டிய தில்லை என்ற எண்ணம்  ஆழமாக இருக்கி றது. இதை மாற்ற வேண்டும். தனித்து வாழும் பெண்களால் வேலைக்குப் போக முடியவில்லை. தனியாக  தங்கமுடிய வில்லை. அவர்கள் எதிர்கொள்ளும் விமர் சனங்கள் கொடூரமானவை” என்று பெண்ணுரிமை ஆர்வலர்கள் வேதனை யுடன் கூறுகின்றனர். விதவைகள், ஆதரவற்ற பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கைம்பெண்கள் மற்றும் ஆதர வற்ற மகளிர் நலவாரியத்தை தமிழக அரசு கடந்தாண்டு அமைத்தது. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது எல்லாப் பெண்க ளுக்குமான உரிமை. தனித்து வாழும் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு ஏற்ற  சூழலை உருவாக்குவதற்காக, திரு மணம் ஆகாத பெண்கள், விதவைகள், விவாகரத்தான பெண்கள், ஓராண்டு அல்லது அதற்கும் மேலாக கணவரைப் பிரிந்த பெண்கள்  ‘தனித்து வாழும் பெண்கள்’ ஆவர். 

பெண்கள் தனியாக வாழ்வதற்கு பல காரணங்கள் உண்டு. அவர்களில் ஒவ் வொருவர் பிரச்சனையும் தேவையும் வெவ்வேறானவை. அதற்கேற்ப உதவி கள் வழங்கப்பட வேண்டும். விதவைப் பெண்களுக்கு பொருளா தார சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு  தேவை. சமூக, பொருளாதார, மறுவாழ்வு தேவை. ஆசிட் வீச்சில் தப்பியவர்களுக்கு வாழ் நாள் முழுவதும் உதவி தேவை. தனித்து வாழும் பெண்களில் பெரும்பாலானோர் உழைக்கும் பெண்கள். அவர்களுக்கு பாதுகாப்பான பொது இடங்கள், பணி இடங்கள் மற்றும் போக்குவரத்து வசதி உருவாக்க வேண்டும்.  தனிப்பெண்கள் குடும்பத் தலைவி களாக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்கள் பெயரில் அதிகா ரப்பூர்வமான ஆவணங்கள் இருக்க வேண்டும். அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், மகாத்மா காந்தி,  தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட எல்லா அரசு பணிகளிலும் இவர் களுக்கான ஒதுக்கீடு இருக்கவேண்டும்.

பெண்களுக்கான எல்லா திட்டங்களி லும் தனித்து வாழும் பெண்களுக்கு முன் னுரிமை வழங்க வேண்டும். மனநல ஆலோசனைகள் உள்ளிட்ட மருத்துவ உதவிகளில் இவர்களுக்கென தனி முக்கி யத்துவம் அளிக்க வேண்டும். அவர்களுக்காக மாவட்டம் தோறும் ஒன்றுக்கு மேற்பட்ட அரசு விடுதிகள் இருக்க வேண்டும். தனித்து வாழும் பெண் கள் புகார்களை உடனடியாக முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்ய வேண்டும்.  பராமரிப்பு மற்றும் விவாகரத்து வழக்கு களின் தீர்ப்புகள் ஜீவனாம்சம் மற்றும் சொத்துக்கான உரிமைகள் தனித்து வாழும் பெண்களுக்கு முழுமையாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் தனித்து வாழும் பெண்கள் கணக் கெடுப்பு நடத்த வேண்டும். பெண்களின் பிரச்சனையை விவாதிக்க சிறப்பு கிராம சபைகளைக் கூட்ட வேண்டும். எல்லா நீதிமன்றங்களிலும் சட்டத் தைக் கையாளும் விதத்தில் பெண்ணியச் சிந்தனையை இணைக்க வேண்டும். தனித்து வாழும் பெண்கள் தங்கள் திறமை களை முழுமையாகப் பயன்படுத்தி சாதிப் பதற்கும், தற்சார்புடன் வாழ்வதற்கும், ஏற்ற சூழலை உறுதிப்படுத்த வேண்டியது அரசு மற்றும் சமுதாயத்தின் கடமை. 

- ஐ.வி.நாகராஜன்