சென்னை, ஜூலை 18- தமிழ்நாடு நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் திங்களன்று (ஜூலை 18) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின், காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “எத்தனையோ விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்தாலும், தமிழ் நாடு திருநாள் என்ற நிகழ்ச்சிக்கு இணை யானது எதுவும் இல்லை”என்றார். தமிழ்நாடு நாளில் பேசுவது என்பது எனக்கு கிடைத்த பெருமை. காணொலி மூலம் பேசுவதால், எனது உடல் சோர்வு நீங்கிவிட்டதாகவே நான் உணருகிறேன். திமுக ஆட்சியில்தான் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.