states

தீக்கதிர் விரைவு செய்திகள்

வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் வேண்டுகோள்

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஏற்றிய முதல் தேசியக் கொடியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தற்போதைய பிரதமர் நரேந்திர  மோடி, “இன்று (ஜூலை 22ஆம் நாள்) நம் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள். 1947 ஆம் ஆண்டு இதே  நாளில் நம் தேசியக் கொடியை நாம் ஏற்றுக் கொண்டோம். நமக்கென தனி தேசியக் கொடி வேண்டும் என்பதற்காக கனவு கண்டவர்கள், ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய தியாகிகளை இந்த நாளில் நினைவு கூர்வோம். அவர்கள் கனவு கண்ட இந்தியாவை நாம் உரு வாக்குவோம். ஆகஸ்ட்13 முதல் 15 வரை, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றுவோம்” என்று வேண்டு கோள் விடுத்துள்ளார்.

சிறைக்கு அஞ்ச, நாங்கள் சாவர்க்கரின் சீடர்கள் அல்ல..!

தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப் பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர் களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “தில்லியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் ஏற்கனவே சிறையில் இருக்கிறார். இதேபோல் விரைவில் கலால்துறை அமைச்சராக இருக்கும் மணீஷ்  சிசோடியாவும் கைது செய்யப்படலாம். ஆங்கிலேயர்களி டம் பலமுறை மன்னிப்பு கேட்ட சாவர்க்கரின் சீடர்கள்தான் பாஜகவினர். ஆனால் நாங்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைய மறுத்து உயிரை தியாகம் செய்த பகத் சிங்கை பின்பற்றுபவர்கள். எப்போதும் சிறை செல்வதற்கு அஞ்சியதில்லை” என்று கூறியுள்ளார்.

நான் அதிமுக எம்.பி.தான் ; ரவீந்திரநாத் பதில் கடிதம்

மக்களவையில் அதிமுக-வுக்கு இருக்கும் ஒரே  எம்.பி.யான ஓ.பி.எஸ். ரவீந்திரநாத்தை கட்சியி லிருந்து நீக்குவதாக அறிவித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவரை அதிமுக எம்.பி.யாக கருத வேண்டாம் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி னார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை நிராகரிக்கக் கோரி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ரவீந்திர நாத்தும் கடிதம் அனுப்பி உள்ளார். அதில்,  எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு  முகாந்திரமும் இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமி  இடைக் கால பொதுச் செயலாளர் ஆனதே செல்லாது என்றும் கூறியுள்ளார்.

ஐ.ஏ.எஸ் அலுவலர்களுக்கு  புது உத்தரவு

சென்னை,ஜூலை 22- விடுப்பு எடுக்கும் ஐ.ஏ.எஸ் அலுவ லர்கள் செல்லும் இடங்களை முன் கூட்டியே குறிப்பிட வேண்டும் என்று  தலைமைச்செயலாளர் தெரிவித்துள் ளார். விடுப்பு எடுக்கும் ஐ.ஏ.எஸ் அலுவ லர்கள் செல்லும் இடங்களையும், முகவரியையும் முன்கூட்டியே குறிப்பிட வேண்டும் என்று தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு தெரிவித்துள்ளார். மேலும் விடுப்புக்குச்செல்லும்போது அவசர காலங்களில் தொடர்புகொள் வதற்கு ஏதுவாக மாற்றுதொலைபேசி எண்களையும் தெரிவிக்க வேண்டும் எனவும்; இதனை அனைத்து ஐ.ஏ.எஸ் அலுவலர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

வாடகையில்லாமல் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆவின் பாலகம்

சென்னை,ஜூலை 22- தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, வருவாய்த்துறைகளைச் சார்ந்த வளாகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் ஒதுக்கீடு செய்யப்பட்டால் வாடகை விலக்கு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆவின் நிறுவனத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய முன் வைப்புத்  தொகை, பாதுகாப்புத் தொகை யின்றியும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிமம் வழங்கப்படும். ஆவின்  நிறுவனத்தின் பால் விற்பனை மையம்  அமைக்கும் திட்டத்தால் ஆண்டு தோறும் 200 மாற்றுத்திறனாளிகள் பயனடையலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மாதம் ரூ. 1000  உதவித் தொகைக்கு  3 லட்சம் விண்ணப்பம்

சென்னை, ஜூலை 22- அரசுப் பள்ளிகளில் படித்த மாணவி கள் உயர் கல்வியை தொடர வேண்டும் என்பதற்காக மாதம் தோறும் ரூ.1000 உதவி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஏழை மாணவிகள் பள்ளியோடு படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்ப தற்காக இத்திட்டம் செயல்படுத்துவதாக கூறப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற இணையதளம் வழியாக கடந்த 15 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரை 3 லட்சம் பேர்  விண்ணப்பித்து இருப்பதாக சமூக  நலத்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இதில் பலர் விண்ணப் பத்தில் முழு விபரங்களை தெரிவிக்க வில்லை. சிலர் இரண்டுக்கும் மேற்பட்ட கல்லூரிகளை குறிப்பிட்டுள்ளனர். 

கல்லூரிகளில்  சேர கால நீட்டிப்பு

சென்னை,ஜூலை 22- தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இதுவரை சுமார் 4 லட்சம்  பேர் விண்ணப்பித்துள்ளனர். அதே போல் பொறியியல் கல்லூரிகளில் சேர்வ தற்கு இதுவரை 1,92,000 பேர்  விண்ணப்பித்துள்ளனர். இந்நிலை யில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளியன்று(ஜூலை 22) வெளியானது. இதனைத் தொடர்ந்து உயர் கல்வித்துறை முதன்மைச் செய லாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாண வர்கள் சேர்க்கைக்கான விண்ணப் பங்களை ஜூலை 27 ஆம் தேதி வரை  சமர்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட் டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு ஹால் டிக்கெட்

சென்னை,ஜூலை 22- தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை ஜூலை 26 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா தெரிவித்திருக்கிறார். செய்முறைத் தேர்வு குறித்த விவரங்களை தனித்தேர்வர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.