states

img

பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும்

மதுரை, ஜூலை 24- மணிப்பூர் கலவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரதமரும், உள்  துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும்  என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலை வரும் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பி னருமான தொல்.திருமாவளவன் வலி யுறுத்தியுள்ளார். மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து மதுரை அண்ணாநகரில் விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தொல்.திருமாவளவன், “மணிப்பூருக்கு பாஜக செல்லாத வரை இரு சமூகத்தினரும் இணக்கமாகவும், சமூக நல்லிணக்கத்துடனும் இருந்தனர். “ஆமை  புகுந்த வீடு விளங்காது” என்பது போல் பாஜக  அங்கு சென்றவுடன் மாநிலமே விளங்கா மல் போய்விட்டது. மேலும் ஆர்.எஸ்‌.எஸ்  உள்ளே நுழைந்தவுடன் அங்கு வெறுப்பு அரசியலையும் நுழைத்து விட்டனர். மணிப்பூ ரில் நடந்த கலவரம் அரசு உதவியுடன் நடந்  துள்ளது. இதற்கு பொறுப்பேற்று மோடியும்,  அமித்ஷாவும் பதவி விலக வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில், விசிக மாவட்டச் செய லாளர்கள் இன்குலாப், கதிரவன், அலங்கை  செல்வ அரசு, முதன்மைச் செயலாளர் பாவ ரசு, அமைப்புச் செயலாளர் எல்லாளன், துணைப் பொதுச் செயலாளர்கள் கனியமு தன், ஆற்றலரசு, வள்ளுவன் கோதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.