states

குழந்தைகளுக்கு தேர்வு பயத்தை உருவாக்கும் 4,5 ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவில் தேர்வு நடத்துவதைக் கைவிடுக!

சென்னை,செப்.25- குழந்தைகளுக்கு தேர்வு பயத்தை உரு வாக்கும் வகையில்  4,5 ஆம் வகுப்பு களுக்கு மாநில அளவில் தேர்வு நடத்து வதை அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமைப்பின் பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வை 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவில் ஒரே வினாத்தாளைப் பின்பற்றி நடத்துமாறு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதற்குரிய வினாக்களைக் குறுந்தகடு வடிவில் அனுப்பி உள்ளதாகவும், தேர்வு  முடிந்த பின்பு 4 மற்றும் 5 ஆம் வகுப்பு களுக்கான பாடவாரியான விடைக் குறிப்பு களை பள்ளிகளுக்கு அனுப்புமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலு வலர்களுக்கும் உத்தரவிட்டு தனது செயல்முறை ஆணை ந.க.எண்: 2411/ஈ2/2020,நாள்: 16.09.2022 இல் தெரி வித்துள்ளார்.

இவ்வாறான தேர்வு நடைமுறை தமிழ்நாட்டின் தொடக்கக் கல்வித் துறையில் இதுவரை இல்லாத ஒன்றாகும். தற்போது வரை ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் முடிய முதல் பருவம், இரண்டாம் பருவம், மற்றும் மூன்றாம் பருவத் தேர்வுகள் அந்தந்தப் பள்ளிகள் அளவிலேயே நடைபெற்று வந்தன. அந்தந்த வகுப்புகளுக்கான பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் மற்றும் பாடப்பொருள் சார்ந்த வினாக்களைக் கொண்டு வகுப்பு ஆசிரி யர்களே வினாக்கள் தயாரித்து தேர்வுகள் நடத்தி வந்தனர். இந்நடைமுறை மாண வர்களின் அடைவுத் திறனை அவர் களுக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களே நுணுக்கமாக மதிப்பீடு செய்யும் முறையாக அமைந்திருந்தது. ஆனால்,மாநிலம் முழு வதும் ஒரே வினாத்தாள் கொண்டு 4 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்துவது என்பது, பொதுத் தேர்வு நடத்துவது போல வும், ஏதோ போட்டித் தேர்வு நடத்துவது போலவும், சின்னஞ்சிறு குழந்தைகளின் நெஞ்சங்களில் தேர்வு பயத்தை உருவாக்கு வது போலவும் உள்ளது. 

உளவியல் ரீதியான அணுகுமுறைக்கு எதிரானது 

தேசிய கல்விக் கொள்கை-2020 இன் மிக முக்கியமான கூறு என்னவென்றால், 3,5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது என்பது. இக்கொள்கை தவறானது,ஏற்க இயலாதது, உளவியல் ரீதியான அணுகுமுறைக்கு எதிரானது என நாட்டின் புகழ்பெற்ற கல்வியாளர்கள், அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தும் அதைப் பொருட்படுத்தாமல் அதை நடைமுறைப்படுத்துவதில் ஒன்றிய அரசு தீவிரமாக உள்ளது. அதே நேரத்தில் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை-2020ஐ கடுமையாக எதிர்க்கும் தற்போதைய தமிழக அரசு, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க நிபுணர் குழுவையும் அமைத்து, அதற்கான பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளது.இச்சூழலில் தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள பொதுத் தேர்வு முறையை 4,5 வகுப்புகளுக்கு கல்வியாண்டின் முதல்  பருவத்தேர்விலேயே மாநில பள்ளிக்கல்வித் துறை கொண்டு வருவது என்பது முற்றி லும் முரண்பாடாக உள்ளது. இது ஆட்சி யாளர்களுக்குத் தெரிந்துதான் நடக்கிறதா? அல்லது தெரியாமல் நடக்கிறதா? என்பதை அறிய முடியவில்லை. 

எனவே தமிழ்நாடு அரசு 4 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கான தேர்வு விஷ யத்தில் கடந்த காலங்களைப் போல் பள்ளி யளவில் தேர்வு நடத்தும் நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.  மேலும்,1,2 மற்றும் 3 ஆம் வகுப்புகளுக் கான எண்ணும் எழுத்தும் பயிற்சித் தேர்வு கள் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி முதல்  30 ஆம் தேதி வரை இஎம்ஐஎஸ் (EMIS) வழி யாக நடைபெற்று வருகிறது.இந்த  இணையவழித் தேர்வு என்பது உண்மை யிலேயே ஆசிரியர்கள் எழுதும் தேர்வா கத்தான் இருக்குமேயொழிய மாணவர்கள் எழுதும் தேர்வாக இருக்காது. மேலும், இதுபோன்ற இணையவழித் தேர்வுகள் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பொருத்தமற்றதாகவும், இதுபோன்ற தேர்வுகள் மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சியும் கிடைக்காமல் செய்வதாகவும் அமைந்துள்ளது. எனவே,1,2,3 வகுப்பு களுக்கும் பள்ளியளவில் அந்தந்த வகுப்பு  ஆசிரியர்கள் வினாத்தாள் தயார் செய்து நடத்தும் தேர்வு முறையே சிறந்ததாகும். எனவே,தொடக்கக் கல்வித் துறையில் நிலவிக் கொண்டிருக்கும் தேர்வு பிரச்சனை யில் தமிழக அரசு உடன் தலையிட்டு நடை முறைச் சாத்தியமற்ற, பெரிய அளவில் பயன் தராத தேர்வு முறைகளைக் கைவிட வேண்டும். பழைய முறையிலேயே தேர்வு களை நடத்திட ஆவன செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;