states

img

ரூ.7லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனம்

கோவை, மே 3 - ரூ.7 லட்சம் மதிப்பீட்டில், மாற்றுத்திற னாளிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி யில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனை சம்பந்தப்பட்ட பயனாளி களுக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி., புதனன்று வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஆர்.நடராஜன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியினை பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்து வருகிறார். குறிப் பாக ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் பயன் பெறும் வகையில், அவர்கள் வசிக்கும் பகுதியில் சமுதாயக் கூடங்கள் அமைப் பது, மாவட்டத்தின் உட்புற கிரமப்பகு திகளில் குடிநீர்த் தொட்டிகள் அமைப்பது, குழந்தைகளுக்கான அங்கன்வாடி, சத்துணவுக் கூடங் கள் அமைப்பது, ரேசன் கடைகள் அமைப்பது, மாற்றுத்திறனாளி களுக்கான இருசக்கர வாகனம் பெறு வதற்கு என முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். இதன்தொடர்ச்சியாக கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத் திறனாளிகள் எட்டு பேருக்கு பிரத்தியேகமாக வடி வமைக்கப்பட்ட வாகனங்களை பெறு வதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். தலா ஒரு வாகனம் ரூ. 83 ஆயிரத்து 500 மதிப்பீட்டில்,  எட்டு வாகனங் களுக்கு ரூ.6 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனங்களை வர வழைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு காந்திபுரத்தில் உள்ள நாடாளு மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

பி.ஆர்.நடராஜன் எம்பி., தலைமை யில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல  அலுவலர் கோ.வசந்த ராம்குமார், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோகரன், கே.எஸ்.கனகராஜ், யு.கே.சிவஞானம், ஆர்.கோபால், வி.ஆர்.பழனிசாமி மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உதவியாளர்கள் நல சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் விஜயராகவன், அமைப்புக் குழு உறுப்பினர் இளையராஜா தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம், சூலூர், கோவை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகள் இந்த வாகனத்தை பெற்றுக்கொண்டு பி.ஆர்.நடராஜன் எம்.பி., க்கு நன்றி தெரிவித்தனர்.