சென்னை, அக்.18- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொது மக்கள் போராட்டம் நடத்தினர். இதன் 100 ஆவது நாளில் போராட்டத்தின்போது மே 22 ஆம் தேதி காவல்துறையினர் சுட்டுத் தள்ளி யதில் 13 பேர் பலியானார்கள். அதிமுக ஆட்சியின்போது நடந்த இந்த சம்பவம் நாடுமுழுவதும் பேரதிர்ச்சியை ஏற் படுத்தியது. இந்த துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான கார ணங்கள், சூழ்நிலைகள் குறித்தும் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைவுகள் காரண மாக பொது சொத்துக்கள், தனியார் சொத்துக்கள் ஆகியவற்றிற்கு ஏற்படுத் தப்பட்ட சேதம் உள்ளிட்ட பிந்தைய நிகழ்வுகள் குறித்து விசாரிப்பதற்கு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமை யில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் பல்வேறு தரப்பி னரிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலங்களை பதிவு செய்தது. இதன் இறுதி அறிக்கை தமிழக சட்டப்பேரவை யில் செவ்வாயன்று (அக்.18) தாக்கல் செய்தது. 520 பக்கங்களை 4 பகுதி களாக தாக்கல் செய்துள்ள அந்த அறிக் கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது முக்கியமான போராட்டக்குழுவினருக்கு அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை. அரசு அதிகாரிகள் அளித்த சாட்சி யங்களின்படி போராட்டக்காரர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து போதுமான நட வடிக்கைகளை எடுத்து இருக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம், காவல்துறை யினர் இடையே ஒருங்கிணைப்பு இல்லா மல் இருந்துள்ளது. மாவட்ட நிர்வா கத்தைச் சேர்ந்த அலுவலர்களும், காவல்துறையினரும் கலவர சூழ்நிலை யை கையாள்வதற்கு ஏதுவாக எந்த நடைமுறையையும் பின்பற்றவில்லை. மாவட்ட நிர்வாகம் காலதாமதமாக பிறப்பித்த தடை உத்தரவும் ஒரு கார ணமாக அமைந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் செயல்படாத நிலை யில் இருந்ததால் மோசமான நிலையில் இருந்து மிக மோசமான நிலைக்கு மாறியது. போராட்டக்காரர்களை தடுப்பதற்கு போதுமான வகையிலான வஜ்ரா வாகனங்களை வரவழைக்காததும், போராட்டக்காரர்களை கலையச் செய்ய தவறியதும் மிகப்பெரிய தவறாகும். போராட்டக்காரர்கள் ஊர்வலமாக வந்தபோது முதல் முறையாக காவல் துறையினருடன் மோதல் ஏற்பட்ட நேரத்தில் ஒரே ஒரு வஜ்ரா வாகனம் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்குழுவினரை அடையாளம் கண்டு கைது செய்யவில்லை. அமை தியை சீர்குலைக்கும் வகையிலான விஷமிகளை அடையாளம் கண்டு அவர்களை தடுப்புக் காவலில் வைத்து இருக்க வேண்டும்.
அது போன்று செய்து இருந்தால் போராட்டக்காரர்கள் முயற்சியை முடக் கும் விதமாக அந்த நடவடிக்கை இருந்து இருக்கும். ஆனால் காவலர்கள் அப்படியான நடவடிக்கை எதுவும் எடுத்ததாக எந்த சான்றும் இல்லை. இது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் குறைபாடாகும். மாநில உளவுத்துறை போராட்டம் பற்றி அறிந்து தகவல் தெரிவித்தும் காவல்துறை தொடர் நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. காவல்துறை தரப்பில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் வரம்பு மீறி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் குற்ற வியல் நடவடிக்கை எடுப்பதற்கு 17 காவல்துறை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும், அப்போ தைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்துறை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வும் பரிந்துரை செய்துள்ளது. இந்த சம்பவத்தில் பலியானவர் களின் உறவினர்கள், சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கலாம்.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் அப்பட்ட மாக விதிமீறல் நடந்துள்ளது. இறந்து போனவர்களின் உடல்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்து வெளியேறிய விதத்தை வைத்து அதை தெரிந்து கொள்ளலாம். தலையின் பின்புறம் வழியாகவும், முதுகு பகுதியிலும், இதயம் மற்றும் மார்பு பகுதியிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. துப்பாக்கி சூடு நடத்தப்படுவதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறை உயர் அதிகாரிகள் செய்ய தவறி விட்டனர். ஆட்சியர் வளாகத்துக்கு உள்ளேயே டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், துணை சூப்பிரண்டு லிங்க திருமாறன் ஆகியோரது உத்தரவின் பேரில் நடத் தப்பட்ட துப்பாக்கி சூடு ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ்குமார் யாதவுக்கு தெரியவில்லை. டி.ஐ.ஜி. அதிகாரத்தை எடுத்துக் கொண்டு துப்பாக்கி சூட்டை நடத்தியி ருக்கிறார். இந்த நிகழ்வை பொறுத்த மட்டில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப் பட்ட துப்பாக்கி சூடு மிகவும் கொடுமை யானது என்று இந்த ஆணையம் கருது கிறது. மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலங்களில் நிகழாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.