states

போலீசாரிடம் ரூ. 8 லட்சம் மோசடி

சென்னை,செப்.15- சிதம்பரம் வட்டம், அண்ணாமலை நகரிலுள்ள காவலர் குடியிருப்பில் வசிப் பவர் பாஸ்கர். காவல் உதவி  ஆய்வாளரான இவரது மகன் விக்னேஷ் (22) பி.இ. மெக்கானிக்கல் பட்டப் படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகின்றார்.  இதற்கிடையில், பாஸ் கருக்கு அவரது நண்பர் மூலம் சென்னையைச் சேர்ந்த சசிகுமார் தன்னை ஐஏஎஸ் அலுவலர் என்று கூறியதோடு மகனுக்கு ரயில்வே வேலை வாங்கி  தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய பாஸ்கர்  ரூ.8 லட்சம் கொடுத்துள்ளார். ஆனாலும் வேலை வாங்கித் தரவில்லை. பலமுறை கேட்டும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.  இதனையடுத்து பாஸ்க ரின் மனைவி, அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

;