states

தில்லி அமைச்சரை விசாரிக்க அனுமதி!

கொல்கத்தாவை சேர்ந்த  ஒரு நிறுவனத்துடன் ‘ஹவாலா’ பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்லியின் சுகாதாரத்துறை அமைச்சர்  சத்யேந்திர ஜெயினை, அமலாக்கத்துறை அதிகாரிகள் திங்களன்று கைது செய்தனர். இந்நிலை யில், செவ்வாயன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, சத்யேந்திர ஜெயினை தங்களின் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி கோரினர். அதனை ஏற்றுக்கொண்ட தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் சத்யேந்திர ஜெயினை ஜூன் 9 வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.