states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஓலா நிறுவனத்திற்கு அபராதம்

2023 ஆம் ஆண்டு பழுதடைந்த எலெக்ட் ரிக் ஸ்கூட்டரை வழங்கியதாக நிசாத் நுகர்வோர் வழக்கு தொடுத்த நிலை யில் நிசாத்திற்கு 1.94 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலை யில் ஸ்கூட்டருக்கான விலை 1.62 லட்சம் 6 சதவீத வட்டி,வழக்கு செலவு 10 ஆயிரம் மன உளைச்சலுக்கு 20 ஆயிரம் வழங்க வேண்டுமே என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு மேலும் 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

சென்னை,ஜூலை 17- பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர்  கே. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் மற்றும் திருமலை ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப் பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு,  கூட்டாளிகளான சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், குன்றத்தூர் திருவேங்க டம், திருநின்றவூர் ராமு என்ற வினோத், அதே பகுதியைச் சேர்ந்த அருள், செல்வ ராஜ் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் 3 பேரை கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் தப்பி ஓட முயன்றபோது போலீசார் சுட்டதில் உயிரிழந்தார். இந்நிலையில் மீதமுள்ள 10 பேரும் போலீஸ் காவல் முடிந்து பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  ஆம்ஸ்ட்ராங் கொலை  வழக்கில் கைதான பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் மற்றும் திருமலை ஆகிய 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

நீலகிரிக்கு ரெட்  அலர்ட் எச்சரிக்கை 

உதகை, ஜூலை 17- நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழைக் கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.  21 செ.மீ.க்கும் மேல் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் சாலையில் விழுந்து போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. கன மழையின் காரணமாக, முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக அவ லாஞ்சி சுற்றுலா மையம், தொட்டபெட்டா காட்சி முனை, பைன் ஃபாரஸ்ட் ஆகிய சுற்றுலா தலங்களை வனத்துறை மூடி யுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையின்றி சுற்றுலா தலங்கள் வெறிச் சோடி காணப்படுகின்றன. மேலும் கடும் குளிரும் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. அவலாஞ்சியில் அதிகபட்ச மாக 34 சென்டி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதி களில் கன மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மின் உற்பத்திக்கு பயன்படும் அணைகளின் நீர் இருப்பும் அதிகரித்துள்ளது.

காவிரியில் நீர் திறப்பு உச்சநீதிமன்றத்தில்  தமிழக அரசு  இன்று வழக்கு!

சென்னை, ஜூலை 17 - தமிழகத்திற்கு காவிரியில் மாதந் தோறும் திறந்து விட வேண்டிய தண்ணீ ரை கர்நாடக அரசு திறக்க மறுத்து வருகிறது. அண்மையில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு கூடி தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டிஎம்சி (சுமார் 11 ஆயிரம் கன  அடி) தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதையும் ஏற்க கர்நாடக அரசு மறுத்து விட்டது. 8 ஆயிரம் கன அடி மட்டுமே திறப்போம் என்று கூறிவிட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சென்னையில் ஜூலை 16 அன்று சட்டப்பேரவைக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம், தமிழ்நாடு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை யில் நடந்தது. இதில், 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  அதிலொன்றாக, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை உடனடியாக பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தை நாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, தமிழக அரசு சார்பில் வியாழக்கிழமை (ஜூலை 18) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஆன்லைன் மூலம் மனுவை அனுப்பி உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட தமிழக அரசு தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆன்லைன் மூலம் மது விற்கும் திட்டம் இல்லை : டாஸ்மாக்

சென்னை, ஜூலை 17- ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என்று டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மதுபானங்களை வீடு களுக்கே சென்று விநியோகம் செய்ய, உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி இருப்பதாக தகவல் வெளியானது.  இந்நிலையில் இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் அளித்த விளக்கத்தில், ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மது விற்கும் திட்டமில்லை. இதுபோன்ற எந்த புது முயற்சியிலும் டாஸ்மாக் நிர்வாகம் இறங்கத் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

சளி, இருமலுடன் சென்னையில்  பரவும் காய்ச்சல்

சென்னை, ஜூலை 17- பருவநிலை மாற்றம் காரணமாக சென்னையில் வசிக்கும் பலர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக் கப்பட்டுள்ளனர். வழக்கமாக மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளை விட தற்போது 2 மடங்கு நோயா ளிகள் காய்ச்சலால் பாதிக் கப்பட்டு சிகிச்சை பெற வரு வதாக மருத்துவர்கள் தெரி விக்கின்றனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறிய தாவது:- பொதுமக்கள் பலர் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மாநக ராட்சி நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்து வமனைகள், தனியார் மருத்துவமனைகள், கிளினி க்குகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குழந்தை திருமணம்: பெற்றோர் மீது வழக்கு 

சென்னை, ஜூலை 17 - மயிலாப்பூரில் குழந்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி 9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் பெற்றோர்கள் ‘குழந்தை திருமணம்’ செய்து வைத்துள்ளதாக சென்னை மாவட்ட சமூக நல அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சமூக நல அலுவலர், சம்பவ இடத்திற்கு சென்று சிறார்களிடம் விசாரணை  நடத்தினர். இதில், இரு வீட்டார் சம்மதத்து டன் குழந்தைகள் திருமணம் நடந்து முடிந்தது தெரிய வந்தது. இதையடுத்து மயிலாப்பூர் காவல் நிலை யத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் சென்று விசாரணை நடத்தி சிறுமி மற்றும் சிறுவனை மீட்டு கெல்லீசில் உள்ள சிறார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், சிறுமியின் தாய், தந்தை, மற்றும் சிறுவனின் தந்தை ஆகியோர் மீது குழந்தை  திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு  பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். மேலும், குழந்தைகள் இருவரின் பெற்றோருக்கும் சம்மன் அனுப்பி விசார ணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.