புதுதில்லி, ஆக. 16 - நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 9 லட்சத்து 86 ஆயிரத்து 585 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. “2022-23 கல்வியாண்டில் நாடு முழுவதி லும் உள்ள அரசுப் பள்ளிகளில் மொத்தம் உள்ள ஆசிரியர்கள் பணியிடங்கள் 62 லட்சத்து 72 ஆயிரத்து 380. இவற்றில் 9 லட்சத்து 86 ஆயிரத்து 585 பணியிடங்கள் பல்வேறு காரணங்களால் காலியாகி நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றில், 7 லட்சத்து 47 ஆயிரத்து 565 பணியிடங்கள் துவக்கப்பள்ளிகளிலும், 1 லட்சத்து 46 ஆயிரத்து 334 பணி யிடங்கள் உயர்நிலைப்பள்ளிகளிலும், 92 ஆயிரத்து 666 பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும் உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை உடனடி யாக நிரப்பினால்தான், ஒன்றிய அரசு தனது புதிய கல்விக் கொள்கையின்படி 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் எனும் இலக்கை விரைந்து அமலாக்க முடியும்” என்று நிலைக்குழு கூறியுள்ளது. தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளி ஆசிரியர் பணியிடங் கள் மொத்தம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 968; அவற்றில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 215 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன, என்றும்; 1753 இடங்கள் காலியாக உள்ளன என்றும் பிறிதொரு கேள்விக்கு அளித்த பதிலில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.