தமிழகத்தில் கொரோனா காலத்தில், 11-ம் வகுப்பு மாணவிகள் 417 பேர், 12-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர், 9-ம் வகுப்பு மாண விகள் 37 பேர், 10-ம் வகுப்பு மாணவிகள் 45 பேர், 8-ம் வகுப்பு மாணவி கள் 10 பேர் என மொத்தம் 511 மாணவிகளுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு உட்படு த்தப்பட்ட புகாரில் எம்எல்ஏவின் மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் நடந் தது ஒரு அரசு வாகனம் என்று தகவல்கள் வெளி யாகியுள்ளன.
தில்லியில் மெட்ரோ வாக னம் நிறுத்துமிடத்தில் புத னன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 90க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ யில் எரிந்து நாசமாகின.
நாடு முழுவதும் உயிரி ழக்கும் ஆண் மற்றும் பெண்களின் வயது விவ ரங்களை அலசி ஆராய்ந்த தில், பெண்களின் சரா சரி ஆயுள் 71.1 வருடங் களாகவும், ஆணின் சரா சரி ஆயுள் 68.4 வருடங் களாகவும் இருப்பதாக இந்திய புள்ளியியல் நிறு வனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் பிஷான் மாவட் டத்தில் புதனன்று பிற் பகல் 2:52 மணிக்கு 5.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு சீனா வில் சிச்சுவான் மாகாணத் தில் உள்ள யான் நகரின் லுஷனில் 6.1 அளவி லான நிலநடுக்கம் ஏற்பட் டது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு லிக்னைட் பவர் புராஜெக்ட் எனப்படும் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்துக் காக கையகப்படுத்தப் பட்ட, அரியலூர் மாவட் டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 11 கிராமங்களில் நிலங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுவதற் கான அரசாணையை தமி ழக அரசு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் பயிலும் மேலும் 8 மாணவர்கள், 21 மாணவிகள் என 29 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவுகளைச் சரிசெய்யும் நோக்கத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான யாங் ஜிச்சியும், ஜப்பானின் தேசிய பாதுகாப்புக்குழுவின் பொதுச் செயலாளரான டாகியோ அகிபாவும் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபரில் சீன ஜனாதிபதியும், ஜப்பான் பிரதமரும் சந்தித்துப் பரிமாறிக் கொண்ட பல்வேறு விஷயங் களை முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் அணு ஆயுதங்களை வைக்க மாட்டோம் என்ற உறுதிமொழி யைத் தர முடியாது என்று அமெரிக்கா தலைமையிலான ராணுவ கூட்டணியான நேட்டோ கூறியுள்ளது. இந்த இரு நாடுகளும் நேட்டோவில் இணையவிருக்கும் புதிய உறுப்பு நாடுகள் என்று தகவல்கள் வெளியாகின. அப்படி உறுப்பினர்களாக இணையும் பட்சத்தில் அந்த நாடுகளில் அணுஆயுதங்களை வைக்க மாட்டோம் என்ற உறுதிமொழியைத் தருமாறு ரஷ்யா கோரியது. நேட்டோ அதை நிராகரித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் புதிய மானியத் திட்டங்களை நடை முறைப்படுத்தப் போவதாக துனீசியா அறிவித்துள்ளது. இந்தத் திட்டங்கள் 2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையில் நடைமுறையில் இருக்கும். திவாலாகும் நிலையில் துனீசியாவின் பொருளாதாரம் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், சர்வதேச நிதியம்(ஐ.எம்.எப்) கதவைக் கடனுக்காகத் தட்டிக் கொண்டிருப்பதுதான் புதிய திட்டங்களுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.