states

இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் உள்ள 370-ஆவது சட்டப்பிரிவு மனு மீதான விசாரணை

புதுதில்லி, ஏப்.25- ஐம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைப் பறிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை  மற்ற நீதிபதிகளுடன் விவா தித்து  விசாரணப்பட்டியலில் சேர்க்கப்படும் என  இந்தியத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா திங்களன்று கூறினார். உச்சநீதிமன்றத்திற்கு மே 23-ஆம் தேதி முதல ஜூலை 11-ஆம்  தேதி வரை  கோடை விடுமுறையாகும். அநேகமாக கோடை விடுமுறைக்குப் பிறகு இந்த மனு  விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படு கிறது. முன்னதாக இந்த வழக்கு குறித்து வழக்கறிஞர்கள் ப.சிதம்பரம், கபில் சிபல் மற்றும் சேகர் நபாடே ஆகியோருடன் என்.வி.ரமணா பேசினார். ஜம்மு-காஷ்மீரை மறு எல்லை வரையறை செய்தது, 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே உடனடியாக பட்டியலிட வேண்டுமென வழக்கறிஞர் ப.சிதம்பரம் என்.வி.ரமணாவிடம் முறையிட்டார். ஜூலை மாதம் மனு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டாலும் இந்த வழக்கை என்.வி.ரமணாவால் முழுமையாக விசாரிக்க முடியாது. ஏனெனில் அவர் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்