தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் என்பது பெரும்பான்மை யான தொழிலாளர்கள் தங்களது எதிர் காலத்திற்கான ஓய்வுகாலச் சேமிப்பை சேமிப்பதற்கான நிறுவனமாக உள்ளது. சமீப காலமாக சேமிப்பு நிதியில் தற்காலிகக் கடன் அல்லது ஓய்வுபெற்ற பின்னர் கோரப்படும் இறுதித்தொகை விண்ணப்பங்கள் சகட்டு மேனிக்கு நிராகரிக்கப்படுகின்றன. இதனால், தொழி லாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இபிஎப் நிறுவனத்தின் அலுவலக ஆவணங்க ளின்படி, 2022-23 ஆம் ஆண்டில், 70.38 லட்சம் வருங்கால வைப்பு நிதி விண்ணப்பங்கள் பெறப் பட்டன. இதில்,40.66 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டு வருங்கால வைப்புநிதி இறுதித் தொகை வழங்கப்பட்டது. 20.49 லட்சம் விண்ணப் பங்கள் (33.8%) நிராகரிக்கப்பட்டன. இந்த அளவுக்கு தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படு வது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தொழிலாளர்களின் வாழ்நாள் சேமிப்பு அவர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் மறுக்கப்படுகிறது. அவுட்லுக் இதழ் இது குறித்த விவரம் கேட்டு, இபிஎப் ஆணையாளர், இந்திய அரசின் தொழிலா ளர் துறை, ஒன்றிய வருங்கால வைப்பு நிதி ஆணை யாளர் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பியது. ஏன் இந்தளவு நிராகரிப்பு, இதைத் தவிர்க்க என்ன வழி என்று கோரியதற்கு அவர்கள் யாருமே பதில் அளிக்கவில்லை.
சாதகமான அம்சங்களைக் கொண்ட இபிஎப் நிறுவனம்
இபிஎப் நிறுவனம் மக்கள் விரும்பும் நிறுவனமா கவும், இந்திய அரசின் ஆதரவுடன் இறையாண்மை பெற்ற நிறுவனமாகவும் உள்ளது. தொழிலாளர்கள் தங்கள் ஓய்வுக் காலத்தில் உதவி புரியும் ஒரே உத்தர வாதமான ஆதாரமாக உள்ளது. 20 ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் எந்த நிறு வனமும் இபிஎப் நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ரூபாய் 15,000 அதற்கு மேலும் ஊதியம் பெறுபவர்கள் இபிஎப் நிறுவனத்தில் சந்தா தாரராக ஆவது கட்டாயமாகும். சந்தாதாரர் ஒவ்வொரு வரும் தனது ஊதியத்தில் 12 சதவீதம் பங்குத் தொகையாக செலுத்த வேண்டும். அதற்கு ஈடான பங்குத் தொகையை தொழில் நிறுவனத்தை நடத்து பவரும் இபிஎப்-க்கு செலுத்த வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் என்பது பெரும்பான்மையான தொழிலாளர்கள் தங்களது எதிர்காலத்திற்கான ஓய்வுகாலச் சேமிப்பை சேமிப்பதற்கான நிறுவனமாக உள்ளது. வருமான வரித்துறைச் சட்டம் ,1961 பிரிவு 80 சி படி, இபிஎப் தொகை ரூபாய் ஒன்றரை லட்சம் வரையில் வரி விலக்கு உண்டு. ஏப்ரல் 2022 முதல் தொழிலாளர் பங்குத் தொகைக்கான வட்டி ரூபாய் இரண்டு லட்சம் வரையில் வரி விலக்கு அளிக்கப்பட்டது. ஐந்து ஆண்டு தொடர்ச்சியாக பணி முடித்தவர்கள் தனது இபிஎப் சேமிப்புத் தொகையை பெறலாம். ஒரு நிறு வனத்தில் பணிபுரிந்து விலகிய பின்னர் வேறொரு நிறுவனத்தில் பணியில் சேரும் போதும் இபிஎப் திட்டம் தொடரும். ஒரு நிறுவனத்தை விட்டு விலகும் போது, இரண்டு மாதம் தொடர்ச்சியாக வேறொரு நிறு வனத்தில் வேலை கிடைக்காமல் இருந்தால் அவர் தமது சேமிப்பில் ஒரு பகுதி தொகையைப் பெற முடியும். கொரோனா பேரிடர் காலத்தில் வேலை இழப்பு ஏற்பட்ட போது, தொழிலாளர்களின் மூன்று மாத அடிப்படை ஊதியம் பிளஸ் அகவிலைப்படி அல்லது சேமிப்புத் தொகையில் 75% பெறலாம் என்று இபிஎப் நிறுவனம் அறிவித்தது. எல்லாம் சரிதான்! ஆனால் இப்போது ஓய்வு இறுதித் தொகை மற்றும் கடனுதவி விண்ணப்பங்கள் செட்டில்மெண்ட் செய்யப்படாமல் மலை போல் குவிந்து கொண்டிருக் கின்றன. இபிஎப் நிறுவனத்தின் நற்பெயர் கேள்விக்குறி யாகிவிட்டது. மருத்துவ சிகிச்சை, திருமணம், கல்வி, வீடு வாங்குதல் -கட்டுதல் -பராமரிப்பு போன்ற செலவு களுக்கும் தமது சேமிப்பு தொகையில் கடன் பெற முடியும்.
குளறுபடியான ஆன்லைன் விண்ணப்ப முறை
வயது முதிர்வு ஓய்வுக்குப்பின் பெறும் இறுதித் தொகை மற்றும் மற்ற கடனுதவி விண்ணப்பங்கள் தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு காரணம் இபிஎப் நிறுவனம் ஆன்லைன் முறை மூலமாக விண்ணப்பிக் கும் முறைக்கு மாறியதுதான். முன்பெல்லாம் ஆவ ணங்களை சரிபார்த்தல், இபிஎப் நிறுவனத்திற்கு அனுப்புவது தொழில் நிறுவன நிர்வாகத்தின் பொறுப்பாக இருந்தது. இப்போது முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். இதன் விளைவாக, சிறிய தவறுகள் கூட விண் ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுத்து விடுகிறது. இபிஎப் நிறுவனம் தமது சந்தாதாரரான தொழிலா ளர்கள் மீது கருணையுடன் நடந்து கொள்வதற்கு மாறாக ஒட்டுமொத்தமாக விண்ணப்பங்களை நிராக ரிக்கிறது. கையெழுத்து விடுபடுதல், முழுமை இல்லாத படிவங்கள், சிறு பிழைகள், தகவல்களில் சிறு முரண் பாடுகள் போன்ற காரணங்களுக்காக நிராகரிக்கப் படுகின்றன. சுய விவரங்கள் அவ்வப்போது சரி செய்யப்படா தது, முழுமையாகாத கேஒய்சி(நோ யுவர் கஸ்டமர்) விபரம் போன்ற காரணங்களுக்காக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. தொழில் நிறுவனத்தினர் இபிஎப் நிறுவனத்தில் பதிந்து கொண்ட விவரத்திற்கும் அனுப்பப்படும் விண் ணப்பத்திற்கும் இடையில் வித்தியாசம் காணப்படு தல், பெயரில் எழுத்துப் பிழை, பிறந்தநாள் பதிவு, ஆதார் அட்டை பதிவு போன்றவைகளுக்கு இடை யிலான வேறுபாடுகள், தவறான அல்லது முந்தைய வங்கிக் கணக்கு எண் என நிராகரிப்புக்கான காரணங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. முதலாளிகள் உரிய பங்குத் தொகையை செலுத்தா தது, பங்குத்தொகை செலுத்திய உரிய விவரம் இல்லாதது ஆகியவற்றிற்காகவும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இதையெல்லாம் கண் காணிக்க வேண்டியது இபிஎப் நிறுவனத்தின் சட்ட ரீதியான கடமையாகும். ஆனால் கண்காணிக்கப்படு வது கிடையாது.
இணையதள சேவைக் கட்டமைப்பு சரியில்லை
இபிஎப் இணையதளம் மோசமாக வடிவமைக் கப்பட்டுள்ளது. அது சந்தாதாரருக்கு ஏற்றவாறு வடி வமைக்கப்படவில்லை. இந்த இணையதள சேவையில் சந்தாதாரர் பதிலளிக்கவும், விளக்கம் அளிக்கவும் அனுமதி கிடையாது. ஒரு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மீண்டும் புதிதாக விண்ணப் பிக்க வேண்டியுள்ளது. ஆன்லைன் சுட்டிக்காட்டும் தவறை சரி செய்து அனுப்பினால் இபிஎப் நிறுவனம் புதிய தவறை சுட்டிக்காட்டுகிறது. இபிஎப் நிறு வனத்தின் ஒட்டுமொத்த இணைய செயல்பாடுகள் மிகவும் பழமையானது. சமூக வலைத்தளத்தில் இபிஎப் நிறுவனத்தின் மீது ஏராளமான புகார்கள் காணப்படுகின்றன. அவை சந்தாதாரர்களின் துயர சாட்சியங்களாக உள்ளன. ஆண்டுக் கணக்கில் விண்ணப்பங்கள் தீர்வு காணப் படாமல் நிலுவையில் உள்ளன.
இப்போதைக்கு சந்தாதாரர்கள் என்ன செய்ய வேண்டும்?
சேமிப்புத் தொகையில் தற்காலிகமாக ஒரு பகுதி தொகை கோருதல்: சந்ததாரரின் முந்தைய பணி விவரம், அங்கு அவர் பணியில் சேர்ந்தது மற்றும் வெளியேறிய நாள் விவரம், அப்போது பணியில் ஏதேனும் இடைவெளி ஏற்பட்டிருந்தால் அதன் விவரம் ஆகியவை ஏற்கனவே இபிஎப் நிறுவனத்திற்கு அனுப் பப்பட்ட விபரங்களுடன் இணக்கமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
யுனிவர்சல் அக்கவுண்ட் எண் (UAC):
இது சாதாரண வங்கிக் கணக்கு போன்று அல்லாது, இபிஎப் நடவடிக்கைக்காக துவங்கப்படும் தனித்துவமான அடையாள எண்ணாகும். சந்தா தாரரின் தற்போதைய பணி விவரம் உடன் யுனிவர்சல் அக்கவுண்ட் எண்ணை இணைக்க வேண்டும். சமீபத்தில் ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு மாறிச் செல்லும்போது இந்த யுனிவர்சல் அக்கவுண்ட் எண் தானாகவே உரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளும் என்று கூறப் படுகிறது.
வங்கிக் கணக்கு:
வங்கிக் கணக்கு எண்ணை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். சந்தாதாரர் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதை தவிர்க்க ஐஎப்ஸ்சி கோடைக் குறிக்க வேண்டும். இது போன்ற விடுபடுதல் பொதுவான நிராகரிப்பிற்கு காரணமாக உள்ளது. சந்தாதாரரின் அடையாளம் மற்றும் முக வரியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்: சந்தாதாரரின் அடையாளம் முகவரி ஆகியவை ஏற்கனவே இபிஎப் நிறுவனத்தில் பராமரிக்கப்படும் அடையாளங்களுக்கு ஒத்ததாக இருக்க வேண்டும். பெயர், பிறந்த நாள், தந்தை பெயர், பாலினம் மற்ற விவரங்கள் சரி பார்க்கப்பட வேண்டும். மெம்பர் சேவா இணையதளம்: இபிஎப் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் சந்தாதார ரின் ஆவணப் பதிவு விபரங்களை அறிந்து கொள்வதற்கு இந்த இணைய தளத்தைப் பயன்படுத்தலாம். தகவல் அறியும் உரிமைச் சட்டம்: சந்தாதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் நிரா கரிக்கப் பட்டதற்கான காரணத்தை அறிந்து மீண்டும் விண்ணப்பிக்கலாம். நுகர்வோர் நீதிமன்றம்: நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 இன் படி, சந்தாதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுதல், அலட்சியப்படுத்தப்படுதல், முறைகேடு ஆகியவற்று க்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் இபிஎப் நிறுவ னத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாம். காரணத்தைக் கண்டறிதல்: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மீண்டும் விண் ணப்பிக்கும் போது, இபிஎப் ஹெல்ப்லைன் மூலம் குறைதீர் பிரிவைத் தொடர்பு கொண்டு விண்ணப்பம் மறுக்கப்பட்டதற்கான உரிய காரணத்தைக் கண்டறிய வேண்டும். இதற்கான இணைய சேவை https://epfigms.gov.in துவங்கப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட முயற்சி: வழக்கறிஞர்கள் மூலம் இபிஎப் நிறுவனம் மீது வழக்குத் தொடரலாம்.
இபிஎப் நிறுவனம் செய்ய வேண்டியது என்ன?
தனது சந்தாதாரர்களுக்கு தரமான சேவை வழங்க வேண்டியது இபிஎப் நிறுவனத்தின் கடமையாகும். இபிஎப் இணையதளத்தின் செயல்முறைகளை ஒழுங்குபடுத்தும் வகையிலும், மேம்படுத்தும் வகை யிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது படிப்படியாக நடை முறைக்கு வரும் நிலையில் உள்ளதாக இபிஎப் நிறுவனம் தெரிவிக்கிறது. இபிஎப் நிறுவனம் தனது டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்த வேண்டும். மேம்படுத்தப் பட்ட இணைய சேவை மூலம் தவறுகள், பிழைகள், முரண்பாடுகள் உடனுக்குடன் சரி செய்யப்படுவ தற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இபிஎப் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இது குறித்து தொடர்ச்சியான பயிற்சி வழங்க வேண்டும். இவையெல்லாம் செய்தால்தான் இன்று உள்ள மோசமான நிலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்த முடியும். சந்தாதாரரின் அடையாளங்களை உறுதிப்படுத்தி துல்லியமான பணப் பரிமாற்றத்திற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதற்கு சந்தாதாரரின் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் பல குறைபாடு களைக் களையலாம். ஒருவரின் வாழ்நாள் முழுவதுமான சேமிப்பை விண்ணப்பித்தவுடன் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்பது இன்றைய நவீன காலத்தில் இயலாதது அல்ல. இதையெல்லாம் இபிஎப் நிறுவனம் சரி செய்வது வரையில், சந்தாதாரர்கள் தான் தங்களின் விண்ணப் பங்களை கவனமாக பதிவேற்றம் செய்ய வேண்டி யுள்ளது. விண்ணப்பித்த பின்னர் தொடர்ச்சியாக கண்காணிக்கவும் வேண்டும். நிராகரிக்கப்பட்டால் உரிய காரணங்களைக் கண்டறிந்து சரி செய்வதும் சந்தாதாரரின் பொறுப்பாக உள்ளது.
நன்றி : அவுட்லுக் மணி (OUTLOOK MONEY), மே.2024,
தமிழில் : ம.கதிரேசன்