states

அக். 10 ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

சென்னை,அக்.2- நூறு நாள் வேலை திட்டத்தில் ஊதிய  பாக்கியை உடனடியாக வழங்க வலியுறுத்தி  வருகிற 10 ஆம் தேதி ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சி ராணி ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- கிராமப்புற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏழைகளின் வாழ்வாதாரத்தை ஓரளவு பாதுகாத்து வருவது மகாத்மா காந்தி  ஊரக வேலை உறுதி திட்டம். அதை ஒழித்துக் கட்டும் நோக்கில் மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து முனைப்புக் காட்டி வருகிறது.  கடந்த ஆண்டை காட்டிலும் 2023-24 நிதி ஆண்டுக்கு 33 விழுக்காடு நிதியை குறைத்தே அதற்கு சான்று. இந்த ஆண்டில் இத்திட்டத்தில் பணி செய்து வரும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏழைகளுக்கு பல வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.  சில ஒன்றியங்களில் மாதக்கணக்கில் ஊதியம் வழங்கப்படவில்லை என புகார்கள் உள்ளன.  இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரிக்கும் போது  ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என காரணம் தெரிவிக்கின்றனர். பண்டிகை காலம் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் ஊதியம் கிடைக்காததால் இத்திட்டத்தில் பணியாற்றுவோர் செய்வது அறியாது உள்ளனர்.  எனவே, ஊதிய நிலுவைத் தொகைகளை ஒன்றிய அரசு உடன்  வழங்க வேண்டும். ஒன்றிய அரசு தரவேண்டிய ஊதிய  நிலுவை தொகைகளை உடன் பெற்று தொழி லாளர்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம். 0.05 விழுக்காடு  இழப்பீட்டுடன் வழங்குக! நூறு நாள் வேலை தொழிலாளர்கள், பணி செய்வதற்கான மஸ்டர் ரோல் முடிக்கப்பட்ட 15 நாட்களுக்குள்  ஊதியம்  வழங்குவதில் தாமதமானால், ஊதியத்து டன் இழப்பீட்டுத் தொகையாக 0.05 விழுக்காடு கூடுதலாக சேர்த்து வழங்க வேண்டும். இதற்கான 100 நாள் வேலை  சட்ட விதியின் அடிப்படையில் இழப்பீடுத்  தொகையும் சேர்த்து வழங்க வேண்டு மென்ற கோரிக்கையையும் உள்ளடக்கிய இப்போராட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.