ஆந்திரப்பிரதேசத்தின் என்.டி.ஆர். மாவட் டத்தில் நந்திகாமம் கிராமத்தில் ஞாயி றன்று காலை 7.13 மணி யளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நில நடுக்கம் 3.4 வினாடிகள் வரை நீடித்து உள்ளது.
கேரளா மாநிலம் திருச் சூரில் உள்ள கல்லூரி யைச் சேர்ந்த மாண வர்கள் மத்தியப் பிரதேச மாநிலம் சாகரில் உள்ள ஹரிசிங் கவுர் பல்க லைக்கழகத்திற்கு களப் பயணம் (Field visit) சென்றனர். இந்நிலை யில், இவர்கள் பேருந்தில் கட்னி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பன்னா மாவட்டத்தில் உள்ள குவாகேடா அருகே பேருந்து கவிழ்ந்தது. இதில் பேருந்து உதவி யாளர் உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பய ணம் செய்த 32 மாண வர்களில் 16 பேர் காயம டைந்தனர்.
துருக்கி-சிரியாவில் ஏற் பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் 44 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். வடமேற்கு சிரியாவில் தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட நிலநடுக்கத்துக்கு இடையே பிறந்த பெண் குழந்தையை குழந்தை யின் தந்தை வழி அத்தை ஹலா, மாமா கலீல்-அல் சவாதி ஆகியோர் தத்தெ டுத்துள்ளனர். குழந் தைக்கு அதனுடைய தாயின் பெயரான அப்ரா என்று பெயரிட்டனர்.
துருக்கியில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டிகளில் விளை யாடிக் கொண்டிருந்த கானா நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் அட்சு துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தார். இவர் குறித்து கடந்த 2 வாரங்களாக எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில், கட்டட இடி பாடுகளில் சிக்கி உயிரி ழந்த அட்சுவின் உடலை கண்டறிந்ததாக அவரின் மேலாளர் சனிக்கிழமை உறுதிப்படுத்தினார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 2 ரஷ்ய வீரர்கள், 1 அமெ ரிக்க வீரரை பூமிக்கு அழைத்து வருவதற்கான சோயுஸ் விண்கலத்தில் கசிவு ஏற்பட்டுள்ள நிலை யில், புதிதாக மற்றொரு விண்கலத்தை பிப்.24 அன்று அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்காஸ் மோஸ் அதிகாரிகள் கூறி யுள்ளனர்.
அமெரிக்காவில் வடக்கு இல்லினாய்ஸ் மாகா ணத்தில் ஹாபி குரூப் என்ற அமைப்பு ரூ.1,000 மதிப்பிலான பிகோ பலூன்களை வெப்ப நிலை, ஈரப்பதம், அழுத் தம் அல்லது காற்றலை கள் பற்றி அளவிடுவதற் காக பயன்படுத்தி வரு கிறது. இந்நிலையில், அப் படி பறக்க விடப்பட்ட பலூன்களில் ஒன்றை அலாஸ்கா மாகாணத்தில் பிப்.11 அன்று அமெரிக்க ஏவுகணை சுட்டு வீழ்த்தி யுள்ளது. இதற்காக அமெரிக்க அரசு ரூ.3 கோடியே 63 லட்சத்து 34 ஆயிரத்து 54 மதிப்பு டைய ஏவுகணையை பயன்படுத்தி உள்ளது.