states

தீக்கதிர் விரைவு செய்திகள்

இலங்கை தமிழர் நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன்

புதுதில்லி, நவ. 2 - ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் நவம்பர் 3 வரை இலங் கையில் பயணம் மேற் கொள்கிறார்.  இந்திய வம்சாவளி தமி ழர்கள் இலங்கை சென்று குடியேறிய 200-ஆவது ஆண்டையொட்டி கொழும் பில் “நாம் 200” என்ற நிக ழ்ச்சி நடைபெறுகிறது.  இதில் நிர்மலா சீதா ராமன் பங்கேற்கிறார். திரு கோணமலை மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளுக் கும் அவர் செல்கிறார். வழி பாட்டு தலங்களான திருக் கோனேஸ்வரம் கோவில், நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆகியவற்றையும் பார்வையிடுகிறார். எனினும் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனை குறித்து இலங் கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளாரா? என்ற தகவல் எதுவும் இல்லை.

ரூ. 2 கோடி  அபராதம் கேட்கும் மாலத்தீவு

சென்னை, நவ. 2 - தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை, கடந்த அக் டோபர் 23 அன்று மாலத்தீவு மாலத்தீவு கடற்படை பிடி த்துச் சென்றது. நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை விடுவிக்க மாலத்தீவு நீதிமன்றம் உத்தர விட்டது. எனினும், விசைப் படகை விடுவிக்க ரூ. 2 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று  மாலத் தீவு அரசு நிபந்தனை விதித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர் கள் 12 பேரும் மாலத்தீவி லேயே உள்ளனர்.

ஆளுநர் விளக்க வேண்டும்: அண்ணாமலை கருத்து

சென்னை, நவ. 2 - தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக போராடிய சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலை தெரி வித்துள்ளார். “தமிழகத்தின் நலனுக்காக, மக்களின் முன்னேற்றத்துக்காக பாடு பட்டவர் சங்கரய்யா. சுதந்திரப் போராட்ட வீரரான அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப் பாடு. ஆனால், அதற்கு ஒப்புதல் வழங்காதது ஏன், என ஆளுநர் மாளிகை தான் விளக்க மளிக்க வேண்டும்” என்று  அண்ணா மலை கூறியுள்ளார்.

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது

சேலம், நவ. 2 - மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2 ஆயிரத்து 968 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அது வியாழனன்று காலை 2  ஆயிரத்து 899 கன அடியாக குறைந்துள்ளது. அணை யின் நீர்மட்டம் 52.73 அடியாக வும், அணையின் நீர் இருப்பு 19.57 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. 

மாணவர்களுக்கு உணவுத் தொகை உயர்வு

சென்னை, நவ.2- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும்  உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப்  படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்களின் உணவுக்கான உதவித் தொகையை தமிழ்நாடு அரசு உயர்த்தி யுள்ளது. கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மாநாடு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை உயர்த்தி அறிவித்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நல விடுதிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு உணவுத் தொகை ரூ.1,000-ல் இருந்து  ரூ.1400-ஆகவும், கல்லூரி மாணவர் களுக்கான உணவுத் தொகை ரூ.1,100-ல் இருந்து ரூ.1,500-ஆகவும் உயர்த்தி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.800 கோடி மதிப்புள்ள  ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சென்னை,நவ.2- சென்னை கிண்டியில் கத்திப்பாரா அருகே ரூ.800 கோடி மதிப்புள்ள நான்கரை ஏக்கர் நிலம் ஆக்கிர மிப்பாளர்களிடமிருந்து வருவாய் துறையினர் மீட்டுள்ளனர்.செங்கப் பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், புனித தோமையார் மலை பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சுமார்  நான்கரை ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது கண்டறியப் பட்டது. குத்தகைக்கு இடத்தை பெற்று பயன்படுத்தி வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இதுவரை எந்தவிதமான குத்தகை பணமும், வாடகையும் தரப்படவில்லை. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தர வின் பெயரில் பல்லாவரம் வட்டாட்சி யர் ஆறுமுகம் தலைமையில் வருவாய்  துறையினர் காவல்துறை பாதுகாப் புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகைகளை வைத்தனர். ஆக்கிரமிப்பு நிலத்தில் இயங்கி வந்த  அரசு உடைமை வங்கி உட்பட 30 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட இடம் சுமார் 800 கோடி  ரூபாய் மதிப்புடையது என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

நவ.9,10,11 இல் கண்டெய்னர் லாரிகள் சென்னை வர தடை

சென்னை, நவ.2- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து அதிகமான மக்கள் சொந்த ஊர்க ளுக்கு செல்வது வழக்கம்.இவர்களின் தேவையை கருத்தில் கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் மட்டு மல்லாது, கே.கே. நகர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக லாரிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, நவ. 9, 10, 11 ஆகிய நாட்க ளில், மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரை, சென்னைக்குள் கண்டெய்னர் லாரிகள் இயக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னைக்குள் வெளி யூர் வாகனங்கள் வரும் மூன்று தேசிய  நெடுஞ்சாலைகளில், இந்த தடை அமலில் இருக்கும்.இந்த சமயத்தில் நகருக்கு வெளியில் தேசிய  நெடுஞ்சாலைகளை ஒட்டி, கண்டெய் னர் லாரிகள் நிறுத்தி வைப்பதற்கான தற்காலிக இடங்களை ஒதுக்க காவல்  துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்  சி.எம்.டி.ஏ.வுக்கு உத்தரவிடப்பட்டுள் ளது.  இவ்வாறு அவர் கூறினார்.