states

தொழிற்சங்கங்களுடன் போனஸ் பேச்சுவார்த்தை நடத்துக!

சென்னை, அக்.24- மாநில பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு போனஸ் குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அறிவிக்கக் கோரி சிஐடியு சார்பில் அக்.26 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. மாநில பொதுத்துறை நிறுவனங்க ளில் செயல்படும் சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் சென்னையில் அமைப்பாளர் கே.திருச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், கே.ஆறுமுக நயினார், வி.தயானந் தம் (அரசு போக்குவரத்து), டி.ஜெய்சங்கர், எம்.வெங்கடேசன் (மின் ஊழியர் மத்திய அமைப்பு), வி.குமார், ஆர்.புவனேஸ்வரன் (சிவில்  சப்ளைஸ்), கே.பி.ராமு, ஜி.சதீஸ் (டாஸ்மாக்), ஆ.கிருஷ்ணமூர்த்தி (கூட்டுறவு), கூட்டுறவு பஞ்சாலை  (எம்.சந்திரன்), கே.விஜயன் (டாமின்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு:- மாநில பொதுத்துறை நிறுவ னங்களான அரசு போக்குவரத்து, மின்சார வாரியம், சிவில் சப்ளைஸ், டாஸ்மாக், ஆவின்,  டாமின்,  அரசு சிமெண்ட்,  அரசு சர்க்கரை, அரசு ரப்பர், அரசு உப்பு, பூம்புகார்  ஷிப்பிங், மேக்னசைட், கூட்டுறவு உள்ளிட்ட நிறுவனங்களில்   பணி புரியும் தொழிலாளர்களுக்கு 2022-23 ஆம் ஆண்டுக்கான போனஸ் கோரிக்கை சம்பந்தப்பட்ட நிர்வா கங்களுக்கு  சங்கங்கள் அனுப்பி யுள்ளன. ஆனால் இதுநாள் வரை பொது  துறை நிர்வாகங்கள் தொழிற் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. அரசின் இத்தகைய அணுகுமுறை தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாநில பொதுத்துறை நிறுவன தொழிலாளருக்கு 2018-19 ஆம் கணக்காண்டு வரையில் 8.33 மற்றும் 11.67 என 20 விழுக்காடு போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், முந்தைய அரசு கொரோனா பொது முடக்கத்தை காரணம் காட்டி 2019-20 கணக்காண்டில் தொழிலாளருக்கு வழங்கி வந்த போனஸ் தொகையை 10 விழுக்காடாக குறைத்தது. அரசின் நிலையை புரிந்து கொண்டு தொழிலாளர்கள் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டார்கள். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசும் முந்தைய அரசின்  போனஸ் நிலைபாட்டை தொடர்ந்து  2020-21, 2021-22 கணக்காண்டுகளில் 10 விழுக்காடாக குறைத்து போனஸ் வழங்கியதை தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. போனஸ் சட்டப்படி நிர்வாகங்கள் கணக்காண்டின் வரவு-செலவு, லாப-நட்ட கணக்கு, போனஸ் கணக்கீடு  அடிப்படையில் தொழிற்சங்கங்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி அறி விக்கும் நடைமுறை முற்றிலும் கை விடப்பட்டு, அரசின் நிதித்துறையின்  கண்ணசைவுக்கும், கருணைக்கும் காத்திருக்கும் நிலை உருவாக்கப் பட்டுள்ளது.

இது பொதுத்துறை நிறுவனங்களில் சுயேச்சையான நிர்வாக நடவடிக்கைகளுக்கு ஊறு விளைவிக்கும். மாநில பொதுத்துறை நிறுவனங் களில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டு மல்ல,  அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் நிறுவனங்கள் அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதிலும், சேவைத் துறையாக செயல்படுகின்றன. தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வார காலமே உள்ள நிலையில் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தேவையான துணிமணிகள், பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி மனமகிழ்வுடன்  கொண்டாடும் வகையில் தமிழ்நாடு பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகங்கள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொரோனா காலத்திற்கு முந்தைய நிலை போன்று  கூடுதல் போனஸ் அறிவிக்க வலி யுறுத்தி 26.10.2023 அன்று மாநில பொதுத்துறை சங்கங்களின் ஒருங்கி ணைப்புக் குழு சார்பில் மாவட்ட தலை நகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மாவட்டங்களில் சிஐடியு வுடன் இணைக்கப்பட்ட மாநில பொதுத்துறை நிறுவனங்களில் செயல்படும்  சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுமென சிஐடியு மாநிலக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.