states

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு: தமிழக அமைச்சர்கள் புறக்கணிப்பு

சென்னை, ஜூன் 1- தேசிய கல்விக் கொள்கை குறித்து குஜராத்தில் நடைபெறும் இரண்டு நாள் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், தேசிய அளவில் கல்வி அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு குஜராத்தில் ஜூன் 1 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதி களில் நடைபெறுகிறது. இந்த மாநாட் டில் பங்கேற்க தமிழகம் உட்பட இந்தி யாவில் உள்ள பல்வேறு மாநிலங்க ளின் கல்வி அமைச்சர்களும் ஒன்றிய  அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டி ருந்தது. இந்த மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர்  இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வில்லை. அதேபோல் தமிழக அரசு சார்பில் துறை செயலாளர்கள் யாரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. குஜராத்தில் நடைபெறும் இந்த  கல்வி மாநாட்டில், புதிய கல்விக்  கொள்கைகள் குறித்து விவாதிக்கப்படு கிறது. மேலும்,புதிய கல்விக் கொள் கையை அமல்படுத்துவது குறித்து மாநாட்டில் பங்கேற்றுள்ள மாநில கல்வி அமைச்சர்களுடன் ஒன்றிய கல்வி அமைச்சர் கலந்தாலோசிக்கிறார். தமிழகம் புதிய கல்விக்கொள் கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா வில்கூட புதிய கல்விக்கொள்கை குறித்த விவாதம் வந்தது. 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு கூட பொதுத்தேர்வு நடத்தும் நிலை புதிய கல்விக்கொள்கையில் இருக்கிறது, இதையெல்லாம் எப்படி ஏற்க முடியும்?  என அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியிருந்தார். புதிய கல்விக்கொள்கையில் உள்ள பல்வேறு அம்சங்கள் ஏற்கக் கூடிய நிலையில் இல்லை என தமிழக  அரசு கூறிவரும் நிலையில், தேசிய  கல்வி மாநாட்டை தமிழகம் புறக்கணித் துள்ளது குறிப்பிடத்தகக்து.