பாக்கியை செலுத்துமாறு மாநிலங்களுக்கு மோடி வலியுறுத்தல்
மாநில அரசுகள் மின்சார நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய சுமார் 2.5 லட்சம் கோடி நிலுவைத்தொகையை செலுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். நாட்டில் மின்சார இழப்பு அதிகமாக இருப்பதால், தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், நிலுவைத் தொகையை செலுத்தாததால், மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் முடங்கியுள்ளன என்று கூறியிருக்கும் பிரதமர் மோடி, கடந்த எட்டு ஆண்டுகளில் சுமார் 1,70,000 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் முர்மு-வுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு கடந்த திங்கட்கிழமையன்று பதவி யேற்றார். இதையடுத்து அவரை பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமையன்று திரௌபதி முர்முவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்தார். இந்நிலையில், சனிக்கிழ மையன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார். இதனை தனது டுவிட்டர் பதிவில், “இன்று ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்” என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
வருமான வரி இன்று தாக்கல் செய்யாவிட்டால் அபராதம்
2021-22-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி விவரங்களை இதுவரையில் 4 கோடிக்கும் அதிகமானோர் தாக்கல் செய்துள்ளனர். ஜூலை 31-ஆம் தேதி வரையே வருமான வரியைத் தாக்கல் செய்யலாம் என்பதால், இதுவரை தாக்கல் செய்யாதவர்கள் கடைசி நாள் வரை காத்திராமல் விரைவில் அதனைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், இதில் தாமதம் செய்யும் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக வருமான வரித் தாக்கல் செய்பவர்களுக்கு ரூ. 1,000, ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமாக வருமான வரித் தாக்கல் செய்பவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தில்லியில் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த முடிவு!
தில்லியில் புதிய மதுக்கொள்கை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி சில்லறை மதுபானக் கடைகளை இனி அரசு நடத்துவதில்லை என்ற முடிவெடுக்கப்பட்டு மதுபான விற்பனை செய்வதற்கான உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டது. இந்த கொள்கையின் கீழ் 850 மது பான கடைகளை திறக்க தனியாருக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. அந்த மதுக் கொள்கை இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் இரண்டு முறை மது கொள்கையை நீட்டிக்கப் பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள புதிய மதுக்கொள்கை ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடைவதால், 2022-23ஆம் ஆண்டுக்கான மதுக் கொள்கை இறுதி செய்யப்படும் வரை சில்லரை மதுபானக் கடைகளை அரசே ஏற்ற நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 5 கோடி வழக்குகள் தேக்கம்!
மாநிலங்களவையில், கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். அதில், “ஜூலை 1- ஆம் தேதி நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் 72 ஆயிரத்து 62 வழக்குகளும், ஜூலை 25-ஆம் தேதி நிலவரப்படி 25 உயர்நீதிமன்றங்களில் 59 லட்சத்து 55 ஆயிரத்து 873 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 4 கோடியே 23 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 4 கோடியே 83 லட்சமாக உள்ளது. இது 5 கோடியை நெருங்கி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மனித கடத்தலுக்கு எதிராக ஆழமான சட்டம் தேவை: கனிமொழி
சென்னை,ஜூலை 30- மனித கடத்தலுக்கு எதிரான உலக விழிப்புணர்வு தின நிகழ்ச்சி சென்னை ராணி மேரி கல்லூரியில் சனிக்கிழமையன்று (ஜூலை 30) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசுகையில், “உலகளவில் மனித கடத்தல் நடைபெறுகிறது. மனித உறுப்பு திருட்டு, பாலியல் தொழில் உள்ளிட்டவைகளில் ஈடுபடுத்த மனித கடத்தல் நிகழ்த்தப்படுகிறது. வளர்ந்த நாடுகளிலும் கொத்தடிமை முறை இருக்கிறது. மனித கடத்தலுக்கு எதிராக ஆழமான சட்டம் தேவை என்ற அழுத்தம் ஒன்றிய அரசுக்கு உள்ள போதி லும் வலுவான மசோதாவை நிறை வேற்றாமல் இருக்கிறது. எனவே, விரைவில் நிறைவேற்ற வேண்டும்” என்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் கீதா ஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இயக்குநர் ரத்னா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
534 கிராமங்களில் 4ஜி சேவை
சென்னை,ஜூலை 30- தமிழகத்தில் உள்ள 534 கிராமங்க ளில் 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையிலுள்ள பத்திரிக்கை தகவல் அலுவலகத்தில் எல்.முருகன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாடு முழுவதும் 34,000 கிராமங்களில், சுமார் ரூ.26,000 கோடி செலவில் 4-ஜி சேவைகளை அறிமுகப்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் 534 கிராமங்கள் இடம்பெற்றுள்ளன. இத்திட்டத்தின்கீழ் பிஎஸ்என்எல் கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப் படு வதுடன், சந்தைப்படுத்துதலும் வலிமைப்படுத்தப்படும். பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் தினந்தோறும் புதிய இணைப்பு வழங்கி வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது” என்றார்.
5 இடங்களில் காற்று கண்காணிப்பு மையம்
சென்னை, ஜூலை 30 - சென்னை மாநகராட்சிக் குள் 5 இடங்களில் காற்று தர தொடர் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் சனிக்கிழமையன்று (ஜூலை 30) நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், வியாசர்பாடி கணேச புரத்தில் சுங்கப்பாதைக்கு மாற்றாக 142 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்,தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகர் பிரதான சாலை யில் 131 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்பாலம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மணலியில் 101 கோடி ரூபாய், ஆதம்பாக்கத்தில் 5 கோடி ரூபாய் செலவில் புதிய பாலமும், கீழ்ப்பாக் கம் கார்டன் சாலையில் உள்ள பாலம் 6.20 கோடி ரூபாய் செலவில் புதுப்பித் தும் கட்டவும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.