சென்னை,ஏப்.15- மக்கள் ஆரோக்கியமாக வாழ்வது என்பது சமூக வளர்ச்சிக்கான அடை யாளம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னையில் நியூபெர்க் டயக்னா ஸ்டிக்ஸ் நிறுவனத்தின் குறைந்த கட்ட ணத்திலான நோய் அறிதல் மையங் களை பெரவள்ளூர், ராமாபுரம், அண்ணா நகர், அசோக் நகர் உள்ளிட்ட 14 இடங்களில் தொடங்கி வைத்து அவர் பேசுகையில் இதை நன்கு உணர்ந்துதான் இதுபோன்ற ஆய்வகங்கள் அதிகளவில் தொடங்கு வதை அரசு ஊக்குவிக்கிறது என்றார். இதன் மூலம் பொதுமக்களின் ஆரோக்கி யம் மேம்படும். மேலும் மிகச் சிறப்பான சேவையும் மக்களுக்குக் கிடைக்கும். சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் நியூபெர்க் உள்ளிட்ட நிறுவ னங்கள் தரமான பரிசோதனை முடிவு களை அளிப்பதோடு தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்திருப்பது வர வேற்கத்தக்கது என்றும் இதன் மூலம் மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பு மேம்படும். அத்துடன் உடல்நலன் பாது காப்பு மேம்படும் என்றும் அவர் தெரி வித்தார். நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் தலை வர் டாக்டர் ஜிஎஸ்கே வேலு பேசுகை யில் நியூபெர்க் நடப்பு நிதி ஆண்டில் தமிழகத்தில் விரிவாக்க நடவடிக் கைகளுக்கு ரூ. 200 கோடி முதலீடு செய்ய உள்ளதாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.